வூஹான் குறித்த உண்மைகளும்; இந்தியாவிலுள்ள கம்யூனிஸ்ட்கள் குறித்த உண்மைகளும்!

covid man made andrew huff - 2026

நாராயணன் திருப்பதி
(பாஜக., துணைத் தலைவர், தமிழகம்)

ஆண்ட்ரு ஹஃ ப் – சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரிசோதனை கூடத்தில் பணியாற்றிய அமெரிக்க நிறுவனத்தை சேர்ந்த இந்த விஞ்ஞானி கொரோனா தொற்று சீனாவில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட பயங்கரம் என்பதை தெளிவாக்கியுள்ளார். சீன அரசும், பரிசோதனை கூடத்தின் அதிகாரிகளும் இதை மறுத்து வந்த நிலையில் அங்கு பணியாற்றிய ஆண்ட்ரு ஹஃ ப் உண்மையை வெட்ட வெளிச்சமாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘வூஹான் குறித்த உண்மைகள்’ என்ற அவரின் சமீபத்திய புத்தகத்தில், கொரோனா தொற்று குறித்த ஆராய்ச்சிக்கு சீனாவுக்கு அமெரிக்க அரசும் நிதி அளித்தது என்று குறிப்பிட்டுள்ளார். போதிய கட்டுப்பாடுகள், பாதுகாப்பு குறைபாடுகள், உறுதி செய்யாத உயிரி பாதுகாப்பு, உரிய தொழில்நுட்ப பாதுகாப்பு அணுகுமுறைகள் போன்றவை கடைபிடிக்கப்படாததாலேயே, வூஹான் பரிசோதனை கூடத்திலிருந்து நோய் தொற்று கசிந்து உலகம் முழுவதும் பரவி பல லட்சக்கணக்கான உயிரிழிப்புகளை ஏற்படுத்தியது என்று குறிப்பிட்டுள்ளார்.

வௌவால்களில் உள்ள பல்வேறு நோய்க்கிருமிகள் குறித்து பல ஆண்டுகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஆண்ட்ரு ஹஃ ப், எகோ ஹெல்த் அல்லையன்ஸ் என்ற அமெரிக்க நிறுவனத்தின் துணை தலைவராக பணியாற்றி கொண்டிருந்தார். அமெரிக்காவின் தேசிய சுகாதார மையத்தின் நிதியுதவியோடு தான் சீனாவின் வூஹான் பரிசோதனை கூடத்தில் ஆராய்ச்சி நடத்தப்பட்டதாக இவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், முதல் நாளிலிருந்தே தங்கள் நாட்டிலிருந்து தான் கொரோனா நோய் தொற்று மரபணு முறையில் பரவியது என்பது சீனாவுக்கு தெரியும் என்றும் உரிய பாதுகாப்பு வழிமுறைகள், சாதனங்கள் இல்லாதது தெரிந்தும், ஆபத்தான இந்த உயிரி தொழில்நுட்பத்தை சீனாவுக்கு வழங்கிய அமெரிக்காவையும் குற்றம் சாட்டியுள்ளார்.

வூஹான் நோய் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி நிறுவனம் சீன அரசினுடையது என்பது உலகறிந்தது. புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தி, உலக அளவில் சீனாவின் பெருமையை உயர்த்த எண்ணிய சீன கம்யூனிஸ்ட் அரசின் அழுத்தம் தான் கொரோனா நோய் தொற்று பரவுவதற்கும், பல லட்சம் உயிர்கள் இழப்பதற்கும் காரணமாய் அமைந்தது என்று பல்வேறு சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

உண்மை இப்படியிருக்க, இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்டுகள் உலகையே புரட்டி போட்ட இந்த நோய் தொற்றிற்கு காரணமாய் அமைந்ததாக சொல்லப்படுகிற சீனாவை விமர்சித்தால் பொங்கி எழுகின்றன என்பதோடு, சீனா 200 கோடி தடுப்பூசியை செலுத்தியதாக அறிவித்த போது கொண்டாடி போற்றி மகிழ்ந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில், இந்திய அரசின் தடுப்பூசிகளை கடுமையாக விமர்சித்ததோடு, இந்தியா 200 கோடி தடுப்பூசிகளை தயாரித்ததாக குறிப்பிட்ட போது வாய் மூடி மௌனமாக இருந்தது அவர்களின் சீன தேசப்பற்றை பறை சாற்றியது. இந்தியாவின் மீதான வெறுப்பை வெளிப்படுத்தியது. கம்யூனிஸ்டுகள் இந்தியாவின் சாபக்கேடு என்றால் அது மிகையாகுமா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories