அர்ஜூன் கபூருடன் விரைவில் திருமணம்: மலைகா அரோரா!

malaika 1 - 2026

தனது இரண்டாவது திருமணம் பற்றிய திட்டங்களை வெளிப்படையாகப் பேசியுள்ளார் நடிகை மலைகா அரோரா.

போனி கபூரின் மகனான நடிகர் அர்ஜுன் கபூரை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக நடிகை மலைகா அரோரா தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை மலைகா அரோராவை சுற்றி எப்போதும் சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். உயிரே படத்தில் ஷாருக்கானுடன் ‘தைய தைய தக தையா’ என ஆட்டம் ஆடி நமக்கு அறிமுகமானவர் தான் இந்த மலைகா.

உயிரே படம் வெளிவந்த ஆண்டு 1998. அப்போதே மலைகா திருமணம் ஆனவர். இந்தி நடிகர் அர்பாஸ் கானை திருமணம் செய்து கொண்டு, ஒரு குழந்தையும் பெற்றுக்கொண்டார்.

malika arora 1 - 2026

ஆனால் அந்த திருமண வாழ்க்கை அவருக்கு தோல்வியில் முடிந்தது. கடந்த 2017ம் ஆண்டு கணவர் அர்பாஸ் கானை விவாகரத்து செய்துவிட்டார். 16 வயதாகும் மகன், மலைகாவுடன் தான் வசித்து வருகிறார்.

மலைகாவும் பிரபல தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூரின் முதல் மனைவியின் மகன் அர்ஜுன் கபுரும் காதலிக்கிறார்கள். அர்ஜுனுக்கு தற்போது 35 வயதாகிறது. மலைகாவுக்கு 46 வயதாகிறது.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

அர்ஜுனும் தானும் காதலிப்பதை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் வெளிப்படையாக அறிவித்தார் மலைகா. சமீபத்தில் மலைகா அரோராவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அர்ஜுன் செம ஆட்டம் போட்ட வீடியோ வைரலானது.

இந்நிலையில் வானொலி ஒன்றிற்கு பேட்டி அளித்த மலைகா அரோரா தனது திருமண திட்டம் குறித்து வெளிப்படுத்தியுள்ளார். அதில், தனது திருமணம் கடற்கரை மணல் பரப்பில், அலங்கரிக்கப்பட்ட மேடையில் தான் நடைபெறும் என மலைகா தெரிவித்துள்ளார்.

malika arora - 2026

லெபனான் நாட்டைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் எல்லி சாப் உருவாக்கும் வெள்ளை நிற திருமண கவுனை அப்போது தான் அணிந்து கொள்வேன் எனவும் மலைகா கூறியுள்ளார்.

அந்த பேட்டியில் அர்ஜுனுக்கும் தனக்கும் இடையே உள்ள உறவு குறித்து மலைகா நிறைய விஷயங்களை பகிர்ந்துள்ளார். 16 வயதில் மகன் இருக்கும் போது, தன்னைவிட 10 வயது இளையவரை காதல் திருமணம் செய்து கொள்ளப் போவதாக மலைகா கூறியிருப்பதை பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

Topics

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Entertainment News

Popular Categories