நடிகர் அஜித் நேரில் வரவில்லை என்று சமூகத் தளங்களில் சர்ச்சை ஏற்பட்டது. இது குறித்து வெளியான தகவல்களுக்கு எஸ்.பி.பி. சரண் விளக்கம் அளித்துள்ளார்.
எஸ்.பி.பி. மருத்துவமனையில் இருந்த போதும், இறுதிச் சடங்குகள் நடைபெற்ற போதும், நடிகர் அஜித் நேரில் வரவில்லை என்று சமூகத் தளங்களில் சர்ச்சை ஏற்பட்டது. இது குறித்து வெளியான தகவல்களுக்கு எஸ்.பி.பி. சரண் விளக்கம் அளித்துள்ளார்.
அஜித் ஏன் வரவில்லை என்பது குறித்து உலவும் சர்ச்சைகளுக்கு பதிலளித்த சரண், அஜித் வந்து பார்த்தாலும், பார்க்காவிட்டாலும் அது பிரச்சினை இல்லை. அது குறித்து எந்த கவலையும் இல்லை, அஜித் எனக்கு நண்பர், எனது தந்தைக்கும் நல்ல பரிச்சயமானவர். ஆனால் அதுகுறித்து நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றார்.

எஸ்.பி.பி. கொரோனாவால் இறக்கவில்லை என்றும் அவர் அதிலிருந்து மீண்டுவிட்டார் என்றும் கூறிய சரண், நுரையீரல் தொற்று காரணமாகவே எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மரணம் அடைந்தார் என்று குறிப்பிட்டார்.



