நிறைய வேண்டியது விளையாட்டு மைதானத்தின் இருக்கைகள் அல்ல… புரட்சியின் மைதானம்.: பாரதிராஜா

bharathirajaa - 2026காவிரி மற்றும் ஸ்டெர்லைட்டுக்காக போராடி வரும் பல்வேறு கட்சியினர்களின் போராட்டங்கள் நேற்று முதல் ஐபிஎல் பக்கம் திரும்பியுள்ளது. சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டியை நிறுத்தியே தீருவது என அரசியல் கட்சியினர் கொதிப்புடன் கிளம்பியுள்ளனர். இந்த நிலையில் இயக்குநர் பாரதிராஜாவும் ஐபிஎல் கிரிக்கெட் குறித்து கூறியுள்ளதாவது

“என் இனிய தமிழ் மக்களே…
நம் இனத்தை அழித்தார்கள்;
நாம் எதுவும் பேசவில்லை.
நம் மொழியைச் சிதைக்கிறார்கள்;
நாம் மவுனமாக இருக்கிறோம்.
நம் உரிமைகள் பறிக்கப்படும்போதும்
போராடாமலே இருக்கிறோம்.

உறைந்து போய்க்கிடக்கும்
நம் உணர்வுகளை
உசுப்பிவிட்டு,
நம்மைப் புரட்சியாளர்களாய்
மாற்ற எத்தனையோ
அமைப்புகள் போராடிக்
கொண்டிருக்கும்போது,
‘ஐபிஎல்’ என்னும் மாய உலகத்திற்கு
நம்மை அடிமைப்படுத்தி,
நம்முடைய தேசியப் புரட்சிக்குத்
தீவைக்கும் முட்டாள்தனமான
விளையாட்டை நிராகரிப்போம்!

தமிழ் மக்களின் ஒற்றுமை
கைகூடி வரும்போது,
கருக்கலைப்பு செய்யவரும்
எந்தவொரு நிகழ்வுக்கும் தடை விதிப்போம்!
தமிழா,
ஐபிஎல் என்னும் கிரிக்கெட்டை
நிராகரி.
நிறைய வேண்டியது
விளையாட்டு மைதானத்தின்
இருக்கைகள் அல்ல…
புரட்சியின் மைதானம்.

தமிழனை விளையாட்டாக
நினைத்து, கிரிக்கெட் விளையாட்டைப் புகுத்தும் மூடர்களே… எங்கள் தமிழர்களுக்கு
வீரவிளையாட்டும் தெரியும்
என்பதை நினைவில் வையுங்கள்.
இது எச்சரிக்கை அல்ல…
அன்புச் சுற்றறிக்கை.

உங்கள் ஐபிஎல் விளையாட்டை விளையாட வேண்டாம் என்று சொல்லவில்லை.
கொஞ்சம் ஒத்தி வையுங்கள்.
மீறி நடந்தால்,
அது ஐபிஎல் விளையாட்டாக இருக்காது.
மாறாக,
எங்கள் வீர இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக் காளைகளோடு களம் காணுவார்கள்
என்பதைத் தமிழ் இன உணர்வோடு
சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்”

இவ்வாறு பாரதிராஜா கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories