பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகம் ஒளிபரப்பானபோது கிட்டத்தட்ட ஐந்தாறு வாரங்கள் கழித்துதான் ஓவியாவுக்கு டுவிட்டர் பயனாளிகள் ஆர்மியை ஆரம்பித்து பரபரப்பை ஏற்படுத்தினர்.
ஆனால் இந்த முறை முதல் நாளே ஒருசிலருக்கு ஆர்மி ஆரம்பித்துவிட்டனர் நெட்டிசன்கள். குறிப்பாக ரித்விகா ஆர்மி, மும்தாஜ் ஆர்மி, ஜனனி ஆர்மி, யாஷிகா ஆர்மி, ஐஸ்வர்யா தத்தா ஆர்மி ஆகிய ஐந்து ஆர்மிகள் டுவிட்டரில் டிரெண்டில் சிறிது நேரம் இருந்தது.
இருப்பினும் ஓவியா ஆர்மிக்கு எந்த ஆர்மியும் இணையாக வரமுடியாது என்றும், ஒருவேளை யாஷிகா நடந்து கொள்வதை பொறுத்து அவருடைய ஆர்மி பரபரப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.