தவறுதலாக பாம் வெடித்து ஹீரோ படுகாயம்! சினிமா ஷூட்டிங்கில் சோகம்!

Published:

telugu cine shoot - 2026

தெலுங்கு திரைப்படம் தெனாலி ராமகிருஷ்ணா சூட்டிங்கில் பாம் வெடித்து ஹீரோ சந்திப் கிஷனுக்கு பலத்த காயம்.

டோலிவுட் ஹீரோக்களை ஷூட்டிங் விபத்துகள் துரத்துகின்றன. ராம்சரண், ஜூனியர் என்டிஆர், வருண் தேஜா என்று வரிசையாக காயம் பட்டார்கள்.

ஜூன் 14 இரவு நாக சௌரியாவுக்கு ஷூட்டிங்கில் மோசமான காயம் ஏற்பட்டுள்ளது.. புதிதாக ஹீரோ சந்தீப் கிஷன் சனிக்கிழமை ஜூன் 15 நேற்று காயமடைந்து உள்ளார் .

சந்தீப் கிஷன் ஹீரோவாக ஜி நாகேஷ்வர ரெட்டி இயக்கத்தில் தயாராகி வரும் படம் தெனாலி ராமக்கிருஷ்ணா. கர்னூலில் படப்பிடிப்பு நடந்து வரும்போது சண்டை மாஸ்டர் செய்த சிறிய தவறால் ஹீரோ காயமடைந்தார்.

சண்டையில் ஒரு பகுதியாக பாம் வெடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. பாம் ஜஸ்ட் மிஸ் ஃபயர் ஆனதால் சந்திப் கிஷனுக்கு நெஞ்சிலும் வலது கையிலும் கண்ணாடித் துண்டுகள் பாய்ந்தன!

உடனே கர்னூலில் மை க்யூர் ஹாஸ்பிடலில் முதலுதவி சிகிச்சை பெற்றார். பின் ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்!

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

தெனாலி ராமகிருஷ்ணா திரைப்படம் தொடர்பாக கர்னூலில் ஷூட் செய்து வரும் ரிஸ்க் ஷாட்ஸ் சிலவற்றின் வீடியோவை சில மணி நேரம் முன்புதான் ட்விட்டரில் போஸ்டர் செய்தார் சந்தீப் கிஷன்! இப்போது அந்த வீடியோ வைரலாகியுள்ளது!

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img