இந்தியன் 2 வில் நடிக்க ஒப்புக்கொண்டேன் ! ப்ரியா பவானி சங்கர் !

pbs - 2026செய்தி சேனல்களில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் ப்ரியா பவானி சங்கர். அடுத்ததாக இவர், சின்னத் திரையில் கவனம் செலுத்தினார். கல்யாணம் முதல் காதல் வரை என்ற சின்னத் திரை சீரியலில் நடித்தார்.

அதையடுத்து, அவர் ரொம்பவும் பிரபலமாகிவிட, அடுத்ததாக அவருக்கு சினிமா சான்ஸ் வந்தது.மேயாத மான் என்ற படத்தில் நடித்தார். படம் வெற்றி பெற, ப்ரியாவின் கிராப்பும் உயரத் துவங்கியது. தொடர்ந்து, கடைக்குட்டிச் சிங்கம் என்ற படத்திலும் நடித்தார். அதுவும் வெற்றி பெற்று விட, அவருக்கென தனியாக ஒரு ரசிகர் கூட்டம் உருவானது.

எஸ்.ஜே.சூர்யாவுடன் மான்ஸ்டர் படத்தில் நடித்தார்; அந்தப் படம் மட்டும் எதிர்பார்த்த அளவுக்குப் போகவில்லை. ஆனால்  சிறந்த நடிகை என்று எஸ் ஜே சூர்யா புகழ்ந்து பேசி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜீவா, அருள்நிதி ஆகியோர் நடிக்கும் படங்களில், ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார். துல்கர் சல்மானுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் ப்ரியா பவானி சங்கர்,தற்பொழுது இந்தியன் 2 படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.pbs1 - 2026ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாஸன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் தவிர்த்து ப்ரியா பவானி சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் கமல் ஹாஸன் படத்தில் நடிப்பதை உறுதி செய்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டுள்ளார் ப்ரியா. படம் குறித்து அவர் இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது,

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நான் ஷங்கர் சார் அலுவலகத்திற்கு சென்றேன். 2 மணிநேரம் கதை சொன்னார்கள். என் கதாபாத்திரம் குறித்து தெரிந்த பிறகு அசந்து போய்விட்டேன். ஹீரோயின்களில் நானும் ஒருவர். உடனே இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.

ஷங்கர் சார் இயக்கத்தில் கமல் சார், சித்தார்த், காஜல் அகர்வால் ஆகியோருடன் சேர்ந்து நடிப்பது ஆசிர்வாதம் என்கிறார் ப்ரியா. அவரின் கதாபாத்திரம் படம் முழுக்க வரும் என்று கூறப்படுகிறது.

இது தவிர்த்து அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் விக்ரம் 54 படத்தில் சீயானுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் ப்ரியா. அடுத்தடுத்து அவர் பெரிய ஹீரோக்களின் படங்களில் நடிக்கிறார்.

சின்னத்திரையில் இருந்தபோதே ப்ரியா பவானி சங்கருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். பெரிய திரைக்கு வந்ததும் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துவிட்டது.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories