கனவில் ஓர் உருவமே; அது எனக்குப் பிடிக்குதே! மகேந்திரன் – மனீஷாஜித் நடிக்கும் ’விந்தை’

Published:

vindhai காதல் 2014 படத்தையடுத்து அன்னை புதுமை மாதா பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக R.L.யேசுதாஸ் R.Y.ஆல்வின், R.Y.கெவின் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ விந்தை “ என்று பெயரிட்டுள்ளனர். இந்தப்படத்தில் மகேந்திரன் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக மனிஷாஜித் நடிக்கிறார். இவர் கம்பீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். நண்பர்கள் கவனத்திற்கு என்ற படத்தில் நாயகியாக நடித்தவர். மற்றும் மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், மகாநதி சங்கர், காதல் சரவணன், முத்துக்காளை, சிசர்மனோகர், டெலிபோன் ராஜ், நெல்லைசிவா, டி.ரவி, கவுதமி, செந்தி ஜெகநாதன், ஐசக், ஆதேஷ், சிவநாராயணமூர்த்தி, சுமதி, தவசி, சுப்புராஜ் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – ரத்தீஷ்கண்ணா / இசை – வில்லியம்ஸ் பாடல்கள் – பாரதி, பொன்முத்துவேல் / கலை – பத்து / எடிட்டிங் – நதிபுயல் நடனம் – தினா / தயாரிப்பு மேற்பார்வை – கார்த்திக் ரெட்டி நிர்வாக தயாரிப்பு – பொன்ராஜ் இணைதயாரிப்பு – R.Y.ஆல்வின், R.Y.கெவின் தயாரிப்பு – R.L.யேசுதாஸ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் லாரா. இவர் ஏற்கெனவே வர்மம் என்ற படத்தை இயக்கியவர். படம் பற்றி இயக்குனர் லாராவிடம் கேட்டபோது ….. ”இந்த படம் முழுக்க முழுக்க காமெடியாக உருவாக்கப் பட்டுள்ளது. சமீபத்தில் கொடைக்கானலில் மகேந்திரன் – மனீஷாஜித் பங்கேற்ற பாடல் காட்சியான “ கனவில் ஓர்உருவமே ! அது எனக்கு பிடிக்குதே “ என்று இருவரும் ஆடிப் பாட டான்ஸ் மாஸ்டர் சங்கர் நடன அமைப்பில் படமாக்கப் பட்டது. இரண்டு மணி நேரம் சிரிப்புக்கு பஞ்சமிருக்காது.. இன்றைய சினிமாவே மக்களை எண்டர்டைன் பண்ண வைக்க வேண்டும். என்ற பார்முலாவை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. அதை தான் நானும் பாலோ செய்யறேன். படத்தின் அனைத்து கட்ட வேலைகளும் முடிந்துவிட்டது. படம் விரைவில் திரைக்கு வர உள்ளது” என்றார் அவர்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img