புத்தன் இயேசு காந்திக்காக பைக் ஓட்டி அசத்திய வசுந்தரா

Published:

 

ப்ளசிங் எண்டர்டெயினர்ஸ் சார்பில், பிரபாதீஸ் சாமுவேல் தயாரித்து வரும் ‘புத்தன் இயேசு காந்தி’ படத்தில் புலனாய்வுப் பத்திரிகையாளராக வசுந்தரா நடித்து வருகிறார்.

அரசியல்வாதிகளின் ஊழலை ஆதாரங்களுடன் பத்திரிகையில் எழுதி அம்பலப்படுத்தும் கதாபாத்திரம் இவருக்கு.

இந்தப் படத்தில் சென்னை நகருக்குள் மிகவும் வேகமாக கார் ஓட்டும் காட்சியில் வசுந்தரா நடித்திருக்கிறார். மேலும், பரபரப்பான நிருபர் கதாபாத்திரத்துக்கு துணிச்சலாக பைக் ஓட்டும் காட்சிகளும் படத்தில் வருகிறது.

மிகச் சிறப்பாக கார் ஓட்டும் வசுந்தராவுக்கு உண்மையில் பைக் ஓட்டத் தெரியாதாம். இதற்காக அவருக்கென படக்குழுவினர் பல நாட்கள் பைக் ஓட்டக் கற்றுத் தந்துள்ளனர். தினமும் காலையில் அண்ணா நகரில் இருந்து கோயம்பேடு, வடபழனி, மதுரவாயல், பூந்தமல்லி என நகரில் பரபரப்பான சாலைகளில் பைக் ஓட்டக் கற்றுக் கொண்டார் வசுந்தரா. அதன்பின் பைக் ஓட்டும் காட்சியில் மிகவும் துணிச்சலாக வேகமாக பைக் ஓட்டி நடித்திருக்கிறார். பல நாட்களாக பைக் ஓட்டுபவர் போல மிகவும் லாவகமாக பைக் ஓட்டியிருக்கிறார். அவரது துணிச்சலை சற்றும் எதிர்பாராத படக்குழுவினர் அவரை பாராட்டினர்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கிஷோர், அசோக், மதுமிதா, கயல் வின்சென்ட், கல்லூரி அகில் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
ஒளிப்பதிவு- விஜய் ஆம்ஸ்ட்ராங் .
இசை- வேத்சங்கர். ​( இவர் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ ‘மதுபானக்கடை’ ,’மூன்றாம் உலகப்போர்’படங்களின் இசையமைப்பாளர்)
பாடல்கள்- கவிபாஸ்கர்
படத்தொகுப்பு- ரமேஷ்பாரதி.
கலை -மூர்த்தி.
நடனம் -எஸ். சுரேஷ் ,
சண்டை -மிண்ட் கணேஷ்
இயக்கம் வே.வெற்றிவேல்சந்திரசேகர்.
இணை தயாரிப்பு கபிலன் சிவபாதம்
தயாரிப்பு பிரபாதீஸ் சாமுவேல்.
சென்னையைச் சுற்றியுள்ள பகுதியில் புத்தன் இயேசு காந்தி’ படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக வளர்ந்து வருகிறது.

 {gallery}gallery/buththan-yesu-ganthi:::0:0{/gallery}

 

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img