தூக்கி விட்ட தொலைக்காட்சியையே அசிங்கப்படுத்திய சிவகார்த்திகேயன்

Published:

siva13

சமீபத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம் அவார்ட்ஸ் வழங்கு விழாவை நடத்தியது. அந்த தொலைக்காட்சியில்தான் சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக பணியாற்றினார். அதன் மூலம் சினிமாவிற்கு வந்து பிரபல நடிகர்களுக்கு சவால் விடும் அளவிற்கு வளர்ந்துள்ளார்.

அந்த தொலைக்காட்சியில் எந்த விழா நடந்தாலும் சிவகார்த்திகேயனை முன்னிலைப்படுத்துவது அந்த தொலைக்காட்சியின் வாடிக்கை. கடந்தாண்டு விருது விழாவில் சிவகார்த்திகேயன் அழுததை போட்டு போட்டு விளம்பரத்தை தேடி கொடுத்தார்கள். ஆனால் இந்த முறை சிவகார்த்திகேயன் பேசியதை அவர்களால் ஒளிபரப்ப முடியாது.

ஏனென்றால், “இந்நிகிழ்ச்சி அதிகாலை 2 மணி வரை போகும். குடிக்க தண்ணிக் கூட தரமாட்டார்கள். அடுத்த முறை வரும்போது எல்லாரும் புளி சோறு, தக்காளி சோறு கட்டிக் கொண்டு வந்துவிடுங்கள்” என்று மேடையில் பேசினார் சிவகார்த்திகேயன். எப்போதுமே விருது வழங்கும் விழா என்றால், சிவகார்த்திகேயன் முதல் ஆளாக வந்து இறுதிவரை இருப்பார். ஆனால், இந்த முறை துல்கர் சல்மானுக்கு சிறந்த புதுமுக நடிகர் விருது கொடுத்து முடித்தவுடன், எங்கு சென்றார் என்று தெரியவில்லை.

இப்போதான் அவர் ரசிகர்கள் மத்தியில் நிலையான இடத்தை பிடித்து விட்டாரே இதுக்கு மேல அந்த தொலைக்காட்சியின் உதவி அவருக்கு தேவையில்லை போல…

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Related articles

Recent articles

spot_img