பெங்களூர்: சொத்துக் குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில், பவானி சிங் நியமனம் குறித்த அன்பழகன் மனு மீது இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதில், பவானி சிங் நியமனம் செல்லாது என்றும், பவானி சிங்கின் எழுத்து பூர்வ வாதத்தை ஏற்கக் கூடாது என்றும், கர்நாடகா அரசு மற்றும் அன்பழகன் தரப்பு தங்களது எழுத்துபூர்வ வாதங்களை ஏப்.28 ஆம் தேதி நாளை தாக்கல் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கர்நாடக அரசு மற்றும் அன்பழகன் தரப்பு வாதங்களையும் கருத்தில் கொண்டு நீதிபதி குமாரசாமி தீர்ப்பளிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இந்தத் தீர்ப்பை அடுத்து, அன்பழகன் தரப்பில் எழுத்துபூர்வமான வாதம் இன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

