உண்மையை மறைக்கப் பார்க்கிறாரா பால்வள ஆணையர்..?

aavin milk - 2026

“உண்மையை மறைக்கப் பார்க்கிறாரா பால்வள ஆணையர்..?”

கடந்த அதிமுக ஆட்சியில் காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சாவூர், நாமக்கல், திருப்பூர், திருச்சி, தேனி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்ட ஆவின் ஒன்றியங்களில் சுமார் 236பேரிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு  முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

அவ்வாறு முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்டு 21மாதங்களுக்கு மேல் ஆன நிலையில் அவர்கள் அனைவரையும் இதுவரை பணி நீக்கமோ, பணியிடை நீக்கமோ செய்யாமல் அனைவருக்கும் சம்பளம் உள்ளிட்ட அனைத்து படிகளையும் வழங்கி விட்டு தற்போது அவர்களுக்கு பணி வரன்முறை, தகுதி காண் பருவம் தொடர்பான உத்தரவுகளை பிறப்பிக்கக் கூடாது என பால்வளத்துறை ஆணையர் திரு. சுப்பையன் ஐஏஎஸ் அவர்கள் அறிவித்திருப்பது வெறும் கண்துடைப்பு நாடகமே.

ஏனெனில் மேற்கண்ட ஆவின் ஒன்றியங்களில் முறைகேடாக பணியில் சேர்ந்த அனைவரையும் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதமே பணி நீக்கம் செய்து விட்டதாகவும், இனிமேல் TNPSC மூலம் தான் ஆவினுக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என பால்வளத்துறை அமைச்சர் திரு நாசர் அவர்கள் ஊடகங்கள் முன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அவ்வாறு கடந்த ஆட்சியில் முறைகேடாக பணியில் சேர்ந்த எவரும் பணி நீக்கமோ, பணியிடை நீக்கமோ செய்யப்படாமல் அதில் பலரும் இந்த ஆட்சியாளர்களின் ஆசியோடும், ஆதரவோடும் இதுவரை சம்பள உயர்வோடு பணி நிரந்தரமும் செய்யப்பட்டு விட்டதாக எழுகின்ற புகாரை மறைக்கவே தற்போது மேற்கண்ட அறிக்கையை பால்வள ஆணையர் வெளியிட்டிருப்பதாக விபரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

ALSO READ:  முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எனவே தமிழகம் முழுவதும் உள்ள 27மாவட்ட ஆவின் ஒன்றியங்களில் இருந்து நாளொரு ஊழலும், பொழுதொரு முறைகேடுகளும் வெளிச்சத்திற்கு வந்து கொண்டே இருக்கும் நிலையில் தமிழக அரசு அமைதி காக்காமல் உரிய நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், அத்துடன் லஞ்சம் கொடுத்து முறைகேடாக பணியில் சேர்ந்த அனைவரையும் உடனடியாக பணி நீக்கம் செய்து அவர்கள் மீதும், லஞ்சம் பெற்றுக் கொண்டு பணியில் அமர்த்திய அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் ன சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

  • சு.ஆ.பொன்னுசாமி
    (நிறுவனத் தலைவர், தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories