உண்மையை மறைக்கப் பார்க்கிறாரா பால்வள ஆணையர்..?

aavin milk - 2026

“உண்மையை மறைக்கப் பார்க்கிறாரா பால்வள ஆணையர்..?”

கடந்த அதிமுக ஆட்சியில் காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சாவூர், நாமக்கல், திருப்பூர், திருச்சி, தேனி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்ட ஆவின் ஒன்றியங்களில் சுமார் 236பேரிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு  முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

அவ்வாறு முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்டு 21மாதங்களுக்கு மேல் ஆன நிலையில் அவர்கள் அனைவரையும் இதுவரை பணி நீக்கமோ, பணியிடை நீக்கமோ செய்யாமல் அனைவருக்கும் சம்பளம் உள்ளிட்ட அனைத்து படிகளையும் வழங்கி விட்டு தற்போது அவர்களுக்கு பணி வரன்முறை, தகுதி காண் பருவம் தொடர்பான உத்தரவுகளை பிறப்பிக்கக் கூடாது என பால்வளத்துறை ஆணையர் திரு. சுப்பையன் ஐஏஎஸ் அவர்கள் அறிவித்திருப்பது வெறும் கண்துடைப்பு நாடகமே.

ஏனெனில் மேற்கண்ட ஆவின் ஒன்றியங்களில் முறைகேடாக பணியில் சேர்ந்த அனைவரையும் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதமே பணி நீக்கம் செய்து விட்டதாகவும், இனிமேல் TNPSC மூலம் தான் ஆவினுக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என பால்வளத்துறை அமைச்சர் திரு நாசர் அவர்கள் ஊடகங்கள் முன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அவ்வாறு கடந்த ஆட்சியில் முறைகேடாக பணியில் சேர்ந்த எவரும் பணி நீக்கமோ, பணியிடை நீக்கமோ செய்யப்படாமல் அதில் பலரும் இந்த ஆட்சியாளர்களின் ஆசியோடும், ஆதரவோடும் இதுவரை சம்பள உயர்வோடு பணி நிரந்தரமும் செய்யப்பட்டு விட்டதாக எழுகின்ற புகாரை மறைக்கவே தற்போது மேற்கண்ட அறிக்கையை பால்வள ஆணையர் வெளியிட்டிருப்பதாக விபரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே தமிழகம் முழுவதும் உள்ள 27மாவட்ட ஆவின் ஒன்றியங்களில் இருந்து நாளொரு ஊழலும், பொழுதொரு முறைகேடுகளும் வெளிச்சத்திற்கு வந்து கொண்டே இருக்கும் நிலையில் தமிழக அரசு அமைதி காக்காமல் உரிய நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், அத்துடன் லஞ்சம் கொடுத்து முறைகேடாக பணியில் சேர்ந்த அனைவரையும் உடனடியாக பணி நீக்கம் செய்து அவர்கள் மீதும், லஞ்சம் பெற்றுக் கொண்டு பணியில் அமர்த்திய அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் ன சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

  • சு.ஆ.பொன்னுசாமி
    (நிறுவனத் தலைவர், தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories