December 8, 2025, 2:40 PM
28.2 C
Chennai

உண்மையை மறைக்கப் பார்க்கிறாரா பால்வள ஆணையர்..?

aavin milk - 2025

“உண்மையை மறைக்கப் பார்க்கிறாரா பால்வள ஆணையர்..?”

கடந்த அதிமுக ஆட்சியில் காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சாவூர், நாமக்கல், திருப்பூர், திருச்சி, தேனி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்ட ஆவின் ஒன்றியங்களில் சுமார் 236பேரிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு  முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

அவ்வாறு முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்டு 21மாதங்களுக்கு மேல் ஆன நிலையில் அவர்கள் அனைவரையும் இதுவரை பணி நீக்கமோ, பணியிடை நீக்கமோ செய்யாமல் அனைவருக்கும் சம்பளம் உள்ளிட்ட அனைத்து படிகளையும் வழங்கி விட்டு தற்போது அவர்களுக்கு பணி வரன்முறை, தகுதி காண் பருவம் தொடர்பான உத்தரவுகளை பிறப்பிக்கக் கூடாது என பால்வளத்துறை ஆணையர் திரு. சுப்பையன் ஐஏஎஸ் அவர்கள் அறிவித்திருப்பது வெறும் கண்துடைப்பு நாடகமே.

ஏனெனில் மேற்கண்ட ஆவின் ஒன்றியங்களில் முறைகேடாக பணியில் சேர்ந்த அனைவரையும் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதமே பணி நீக்கம் செய்து விட்டதாகவும், இனிமேல் TNPSC மூலம் தான் ஆவினுக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என பால்வளத்துறை அமைச்சர் திரு நாசர் அவர்கள் ஊடகங்கள் முன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அவ்வாறு கடந்த ஆட்சியில் முறைகேடாக பணியில் சேர்ந்த எவரும் பணி நீக்கமோ, பணியிடை நீக்கமோ செய்யப்படாமல் அதில் பலரும் இந்த ஆட்சியாளர்களின் ஆசியோடும், ஆதரவோடும் இதுவரை சம்பள உயர்வோடு பணி நிரந்தரமும் செய்யப்பட்டு விட்டதாக எழுகின்ற புகாரை மறைக்கவே தற்போது மேற்கண்ட அறிக்கையை பால்வள ஆணையர் வெளியிட்டிருப்பதாக விபரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே தமிழகம் முழுவதும் உள்ள 27மாவட்ட ஆவின் ஒன்றியங்களில் இருந்து நாளொரு ஊழலும், பொழுதொரு முறைகேடுகளும் வெளிச்சத்திற்கு வந்து கொண்டே இருக்கும் நிலையில் தமிழக அரசு அமைதி காக்காமல் உரிய நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், அத்துடன் லஞ்சம் கொடுத்து முறைகேடாக பணியில் சேர்ந்த அனைவரையும் உடனடியாக பணி நீக்கம் செய்து அவர்கள் மீதும், லஞ்சம் பெற்றுக் கொண்டு பணியில் அமர்த்திய அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் ன சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

  • சு.ஆ.பொன்னுசாமி
    (நிறுவனத் தலைவர், தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

Topics

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

Entertainment News

Popular Categories