தந்தையை கொலை செய்த நபரை கொலை செய்த 6 பேர் கைது

Published:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தந்தையை கொலை செய்த நபரை பழிக்கு பழியாக கொலை செய்த மகன் உள்பட 6 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ளது அர்ச்சனாபுரம் கிராமம். இந்த பகுதியில் வசிக்கும் மாரியப்பன் என்பவரை அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் கடந்த மார்ச் மாதம் கொலை செய்துள்ளார்.பின்பு அவர்  சிறையில் அடைக்கப்பட்டு அதன் பின் ஜாமினில் வெளியே வந்து தலைமறைவாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊரான அர்ச்சுனாபுரத்திற்கு  முருகன் வந்துள்ளார். அவரை கண்ட இறந்த மாரியப்பனின் மகன்  அர்ச்சுனாபுரத்தைச் சேர்ந்த. ரஞ்சித்குமார்(24) மற்றும் பேச்சியப்பன்(27),முத்துக்குமார்(20) வத்திராயிருப்பதைச் சேர்ந்த முத்து(40),சூர்யா(22),பால்பாண்டி(45)  ஆகிய

 ஆறு பேரும் சேர்ந்து பழிக்கு பழியாக வத்திராயிருப்பு – அர்ச்சுனாபுரம் சாலையில் உள்ள வயல்வெளியில் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் ரஞ்சித்குமார் மட்டும் சரணடைந்தார். மற்ற ஐந்து பேரையும் வத்திராயிருப்பு போலீசார் கைது செய்தனர். பின்னர் உடலை மீட்ட காவல்துறையினர் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு பிரேத  பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

இச்சம்பவம் குறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img