December 5, 2025, 3:38 PM
27.9 C
Chennai

பொங்கலை பொங்கல் திருநாளாகவே கொண்டாட விடுங்களேன்!

pongal - 2025

திருவள்ளுவர் தினம் என்று இன்று தமிழக அரசு சார்பில் கொண்டாடுகிறார்கள். ஆனால் உண்மையான திருவள்ளுவர் பிறந்த தினத்தை வைகாசி அனுஷம் என்று குறிப்பிட்டுள்ளதன் பேரில் வள்ளுவ அன்பர்கள் அன்று மரபாகக் கொண்டாடிக் கொள்கிறார்கள். வள்ளுவ நாயனார் என்று  போற்றப்படுவதால் சைவம் அவருக்கு கோயில் எடுத்து அபிஷேக ஆராதனைகள் செய்து வைகாசி அனுஷத்தை சிறப்பாக்குகிறது. நிற்க.

பொங்கல் திருநாள் என்பது மகர சங்கராந்தி எனப்படும் சூரியனின் பாதை மாற்றத்தை குறிப்பிடும் நாளன்று செய்யப்படும் பூஜைக்குரிய திருநாள்.  ஆதிகாலம் தொட்டு தமிழர்கள் ஆகிய இந்துக்கள்  நிலங்களையும்  நிலத்துக்கென தெய்வங்களையும்  மரங்கள் ஆறுகள்  மலைகள் உள்ளிட்ட இயற்கையையும்  தெய்வாம்சமாகப் பார்த்து வணங்கிய  செய்திகள், தொல்காப்பியம் தொட்டு உண்டு.  அன்று பகலவனை பகவானெனப் போற்றி வழிபடும் தொன்ம மரபு நம் முன்னோரின் மரபு. இது நாடு முழுதுமே ஒவ்வொரு பெயரில் இருந்தாலும் அண்மைக்காலமாக தமிழர் திருநாள் என்று அடையாளப்படுத்தப்பட்டு வழிபாட்டைச் சிதைக்கும் போக்கு மேலோங்கி நிற்கிறது. இதை ஆன்ம உணர்வுள்ள ஹிந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

செருப்பைப் போட்டுக் கொண்டு, நெருப்பில்லா புகையில்லா அடுப்பில், விருப்பில்லா வேற்று மதப் பெண்களை வைத்து, இருப்பில்லா திராவிடத்தை அரசின் கொள்கையெனக் காட்டும் முகமாக, சினிமாவால் சினிமாவில் வளர்ந்த நாடகத்தன திராவிடம் காட்டும் படப்பிடிப்புகளை, தெய்வாம்சம் பொருந்திய பொங்கல் நாளில் வைத்துக் கொள்வது, நம் பாரம்பரியத்தை சிதறடிக்கும் இன அழிப்பு, மரபு ஒழிப்புச் செயல்களே! 

இதற்கு பின்னணியில் குரல் கொடுக்கும் வேற்று மத அரசியல் அமைப்புகள், இந்நாளை தமிழர் திருநாளெனக் கொண்டாடும் போது, ஒரே இறைக் கொள்கை கொண்ட எங்களுக்கு மனம் புண்படுகிறது எனவே சூரிய வழிபாட்டைத் தவிர்த்து இப் பொங்கல் கொண்டாடப்பட வேண்டும் என கோருவது, தமிழராகிய ஹிந்துக்களின் மரபை ஒழிக்கும் உள்நோக்க வேலையே! 

எனவே… திராவிடக் கொள்கையைத் தூக்கிப் பிடிக்கும் அரசுகள் இந்தப் பொங்கல் திருநாளை மக்கள் அவர்கள் மரபுப் படி கொண்டாடிக் கொள்ள விட்டுவிட்டு, அரசின் சார்பில் வேறொரு நாளை – அது ஈவேரா நாயக்கர், அண்ணாதுரை, கருணாநிதி பிறந்தநாள்களில் அல்லது மறைந்த நாள்களில் கூட வைத்துக் கொள்ளட்டும் – தேர்ந்தெடுத்து, பொங்கல் வைத்து, ஷூட்டிங் நடத்தி, சமத்துவப் பொங்கலாய்க் கொண்டாடிக் கொள்ளட்டும்! நமக்கு மறுப்பேதுமில்லை!  

காரணம்…

ஹிந்துக்களின் பாரம்பரிய வழிபாட்டு முறைகளைத் திருடும் கிறிஸ்துவம் – கோயிலில் கொடிமரம் போல் சர்ச்சுகளில் வைத்து… ஹிந்துக்களின் ஆன்மிகத் திருவிழாக்கள் போல்… அனைத்தையும் பிரதி எடுத்து அவற்றில் தெய்வங்களையும் கதைகளையும் மட்டும் மற்றி…  ஹிந்துக்களின் தனித்துவத்தை திட்டமிட்டு அழிப்பது போல்… 

ஹிந்துக்களின் பாரம்பரிய விழாக்களை திட்டமிட்டு அழிக்கும் கிறிஸ்துவ இசுலாமிய திராவிடம் – தமிழர் திருநாள் என்று வேறு ஒரு நாளை தேர்ந்தெடுத்துக் கொண்டாடட்டும்! அன்று ஆன்மிக உணர்வுள்ள ஹிந்து எவரையேனும் பொங்கல் கிண்ட கரண்டி பிடிக்க அழைத்தாலும், அவர் செருப்பை கழற்றி வைத்து நெற்றியில் திலகம் / நீறணிந்து வருவார்! வரவேற்போம்!

எதற்காக மகர சங்கராந்தி எனும் சூரிய வழிபாட்டுப் பொங்கல் திருநாளில் நீங்கள் கை வைக்கிறீர்கள்? 

மேற்படி தமிழின அழிப்பு, மரபொழிப்பு செயல்திட்டத்தில் தானே! 

#பாசிஸ_திராவிடம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories