டிஇடி- ஆசிரியர் தேர்வை ரத்து செய்து மறு தேர்வு நடத்த ஏபிவிபி கோரிக்கை!

abvp nellai protest - 2026

டி இ டி – ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்து மீண்டும் மறு தேர்வு நடத்த வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி, நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப் படும் என்று ஏபிவிபி – மாணவர் அமைப்பு அறிவித்திருந்தது. 

அதன்படி இன்று காலை டி இ டி தேர்வு முறைகேடு தொடர்பாக நெல்லை மாவட்ட வருவாய் அதிகாரி முத்துராமலிங்கத்திடம் இது குறித்த கோரிக்கை மனு அளிக்கப் பட்டது.  இதில் நெல்லை மாவட்ட ஏபிவிபி ஒருங்கிணைப்பாளர் கோபிகங்காதரன், இணை ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ், அலுவலக செயலாளர் ராகுல், பல்கலைகழக தலைவர் வெங்கடேஷ், பள்ளிகள் பொறுப்பாளர் ஹரிசந்திரன், மண்டல அமைப்பு செயலாளர் பிருத்திவிராஜன் மற்றும் மாணவ பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

drdo abvp petition - 2026

ஏபிவிபி., அளித்த மனுவில் குறிப்பிடப் பட்டிருப்பது…

மதிப்புக்குரிய ஆட்சித் தலைவர் அவர்களுக்கு…

கோரிக்கைகள் : 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8தேதி மற்றும் 9 தேதி அன்று நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக ABVP க்கு புகார்கள் வருகின்றன.

காரணங்கள் : கடந்த முறை நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு இன்றுவரை அரசாணை வழங்கப்பட உள்ள சூழ்நிலையில் எதற்காக 2019ஆம் ஆண்டு புதிதாக ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்பட்டது என்பதற்கு உரிய காரணத்தை அரசு வெளியிட வேண்டும் . 

2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்ட அந்த தேர்வினுடைய கேள்வித்தாள் மிகவும் கடினமாக இருந்தது என்பதும் அதன் விளைவாக தேர்வினுடைய முடிவுகளானது  இதுவரை இல்லாத அளவிற்கு குறைந்த சதவீதம் உள்ளது; எனவே இந்த தேர்வை ரத்து செய்து மீண்டும் தேர்வு கட்டணம் இன்றி மறுதேர்வு நடத்தப்பட வேண்டும்!

கடந்த முறை நடைபெற்ற அந்த தேர்வினுடைய 20,000 பேருக்கு அரசு ஆணை வழங்கப் படாத சூழலில் இந்த ஆண்டு தேர்வு நடத்தப்பட வேண்டிய காரணங்களை தெளிவாக வழங்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட ஏபிவிபி கேட்டுக்கொள்கிறது… என்று மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் C.விக்னேஷ் மூலம் மனு அளிக்கப் பட்டது. 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories