December 6, 2025, 1:24 AM
26 C
Chennai

கொரோனா: ஆசிரியர்கள், மாணவிகள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு!

corona virus
corona virus

தமிழகத்தின் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது.

முதல் அலையின் தாக்கம் சற்று குறைந்த நிலையில் பள்ளிகள் திறக்கப் பட்டது. ஆனால் தொற்று பரவும் அபாயம் அதிகம் ஆனதால் மீண்டும் பள்ளி , கல்லூரிகள் மூடப்பட்டன.

இதை தொடர்ந்து இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தமிழகத்தில் கடந்த 1ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.

பள்ளிக்கு மாணவர்கள் வருகை என்பது கட்டாயமல்ல; பள்ளிக்கு வர இயலாத மாணவர்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை கவனிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அத்துடன் பள்ளிக்கு வரும் மாணவர்களின் பாதுகாப்பை கருதி வழிகாட்டு நெறிமுறைகளும் பள்ளிக்கல்வித்துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள், பணியாளர்கள் , கல்லூரி மாணவர்கள் என அனைவரும் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மாணவிகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

அரியலூர் அரசு உதவிபெறும் மகளிர் பள்ளியில் மேலும் ஒரு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில் சக மாணவி ஒருவருக்கு பாதிப்பு உறுதியானது.

அத்துடன் தஞ்சை அரசு குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி மாணவி ஒருவருக்கும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அரியலூர் பள்ளி மாணவிக்கு கொரோனா உறுதியான நிலையில் மாணவி அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் வரதராஜன் பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் 12 ஆம் வகுப்பு மாணவிக்கும் கண்டறியப்பட்டது. அதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் படிக்கும் ஒரு மாணவி க்கும் உறுதியான நிலையில், கடலூர் மாவட்டத்தில் 3 ஆசிரியர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இப்படியாக தமிழகத்தின் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள், ஆசிரியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடப்படுமா என்ற சந்தேகம் எழுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories