இங்கிதம் பழகுவோம்(24) -இவ்வளவுதான் பெண்ணியம்!

24. ingitham Pazhaguvom - 2026

என் அலுவலகத்தில் இன்று ஒரு கிளையிண்ட் மீட்டிங். கிளையிண்ட் சிங்கப்பூரில் இருந்து ஒரு பிராஜெக்ட்டுக்காக வந்திருக்கிறார். அப்படியே என்னையும் சந்தித்துப் பேசினார்.  

நானும் என் நிறுவனம் பற்றியும் தயாரிப்புகள் குறித்தும் சொன்னேன். ஆனால் துளியும் அவை அவர் கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ளப்படவில்லை என்பது அடுத்து அவர் சொன்ன ஒரு கருத்தில் நிரூபணமானது.

‘உங்கள் நிறுவனம் என்  நிறுவனத்துடன் தொடர்பில் இருந்தால் சிங்கப்பூரில் மட்டுமல்ல உலக அளவில் உங்கள் பெயரை கொண்டு சேர்க்கிறேன். உங்கள் திறமை எல்லாம் இங்கேயே முடங்கி உள்ளதே…’ என்றார்.

நான்  பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தேன். இப்போதுதான் என் தயாரிப்புகள் குறித்தும் அதற்கான வரவேற்பு குறித்தும் நேரடியாக புரியும்படி சொன்னேன். சுருங்கச் சொன்னால் ‘தம்பட்டம்’ அடித்துக்கொண்டேன்.

பெருந்தன்மையாக சொன்னால் புரிந்துகொள்ளாதபோது  ‘தம்பட்டம்’ அடிக்கத்தானே வேண்டியுள்ளது. பல நேரங்களில் அதுதான் பலருக்கும் பல விஷயங்களைப் புரிய வைக்கிறது.

சிங்கப்பூர் மலேஷியாவில் பெரும்பாலான நூலகங்களில் என் புத்தகங்கள் பல வருடங்களாக இருப்பதைச் சொன்னேன்.

அமெரிக்காவில் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் சாஃப்ட்வேர் துறையில் உயர் பதவியில் இருக்கும் ஒருவர் என் ‘ஃபோட்டோஷாப்’ உள்ளிட்ட சில புத்தகங்களுக்கு மதிப்புரை எழுதிக்கொடுத்ததைப் பகிர்ந்தேன்.

நான் அமெரிக்க மிசவுரி பல்கலைக்கழகத்தில் கல்வி குறித்து ஆவணப்படம் எடுத்ததையும் சொல்லி அந்த வீடியோவை காண்பித்தேன். அது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டதையும் கூறினேன்.

என்னிடம் பணிபுரிந்து அனுபவம் பெற்றவர்கள் உலகில் பல நாடுகளில் உயர் பதவியில் இருக்கிறார்கள் என்பதையும் பெருமிதத்துடன் சொன்னேன்.

என் குரலில் இருந்த தன்னம்பிக்கையை உணர்ந்தவர் என்னிடம், ‘மேடம் நீங்கள் ஃபெமினிஸ்ட்டா? என்றார்.

‘ஆமாம். நான் நானாக வாழ்கிறேன். அந்த வரத்தை… சூழலை… பெற்றிருக்கிறேன்… அந்த வகையில் நான் ஃபெமினிஸ்ட் தான். ஆனால் நீங்கள் மனதில் ஃபெமினிசமுக்கு ஒரு டெம்ப்ளேட் வைத்துக்கொண்டிருக்கிறீர்கள் அல்லவா… அந்தவகை ஃபெமினிஸ்ட் நான் அல்ல…’ என்றேன்.

புரிந்து கொண்டாரா என தெரியவில்லை. மீட்டிங் முடிந்து கிளம்பும் வரை அவரது பேச்சு ‘தொனி’ மாறியிருந்தது. ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாகப் பேசினார்.

இதுதாங்க ஃபெமினிஸ்ட், ஃபெமினிசம், பெண்ணியம் எல்லாமும்…

தன்னைப் புரியவைக்கும் நுட்பம், தைரியம், தன்னம்பிக்கை, மதிநுட்பம், தவறை சுட்டிக்காட்டும் மேன்மை, அன்பும் அரவணைப்பும் இதெல்லாம் எங்கு தென்படுகிறதோ அதெல்லாம் ஃபெமினிசத்தின் பண்புகள்…முக்கியமாக நாம் நாமாக வாழும் பக்குவம் இருந்துவிட்டால் அதுதான் ஃபெமினிஸம்.

ஆனால் அவரவர் பார்வையில் அதற்கு வெவ்வேறு விளக்கங்கள் வைத்துக்கொள்கின்றனர்!

– காம்கேர் கே. புவனேஸ்வரி

கட்டுரையாளர் குறித்து…

This image has an empty alt attribute; its file name is bhuvaneswari-compcare.jpg

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட்

ஐ.டி நிறுவன CEO, தொழில்நுட்ப வல்லுநர், கிரியேடிவ் டைரக்டர், எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர் என பல்முகம் கொண்ட இவர் M.Sc., Computer Science மற்றும் M.B.A பட்டங்கள் பெற்றவர். Compcare Software Private Limited என்ற சாஃப்ட்வேர் தயாரிப்பு நிறுவனத்தின் CEO & MD ஆக கடந்த 25 ஆண்டுகளாக  செயல்பட்டு வருகிறார். 100-க்கும் மேற்பட்ட தொழில் நுட்பம் மற்றும் வாழ்வியல் புத்தகங்கள் எழுதியுள்ள இவரது சாஃப்ட்வேர்  மற்றும் அனிமேஷன் தயாரிப்புகளும், தொழில்நுட்பப் புத்தகங்களும் பல பல்கலைக்கழகம் சார்ந்த கல்லூரிகளில் பாடத் திட்டமாக உள்ளன. For More Info.. http://compcarebhuvaneswari.com/ http://compcaresoftware.com/

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories