December 6, 2025, 3:24 AM
24.9 C
Chennai

ஜூன் மாதம் மீண்டும் எம்.பில்., நுழைவுத் தேர்வு! உறுதி கூறிய நெல்லை பல்கலை துணைவேந்தர்!

nellai university vice chancellor pitchumani - 2025

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பின் கோரிக்கையை ஏற்று நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் பிச்சுமணி, MPhil நுழைவுத் தேர்வினை வரும் ஜூன் மாதம் மீண்டும்  நிச்சயமாக நடத்துவோம் என உறுதி கூறியுள்ளார் என்று ஏபிவிபி மாணவர்கள் கூறினர்.

நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் கடந்த மாதம் ( மார்ச் ) 2019-2020 கல்வி ஆண்டிற்கான எம்பில்., பிஎச்டி நுழைவு தேர்வினை நடத்தியது. ஆனால், அந்த நேரத்தில் பெருவாரியான மாணவர்கள் தேர்வினை எழுத இயலாமல் போனது. காரணம், நுழைவுத் தேர்வு நடைபெற்ற நாள் வேலை நால் என்பதால் கன்னியாகுமரி தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது.

மேலும் தேர்வு குறித்த தகவல் சரியான முறையில் மாணவர்களிடம் சென்று சேரவில்லை என மாணவர்கள் குறை கூறினர். இந்நிலையில், மாணவர்களின் மன வருத்தத்தை ஏபிவிபி., மாணவ தலைவர்கள் நெல்லை பல்கலை துணைவேந்தரிடம் எடுத்துக் கூறினர்.

இதை அடுத்து, நெல்லை பல்கலைத் துணைவேந்தர் பிச்சுமணி,  MPhil நுழைவுத்தேர்வு வரும் ஜூன் மாதம் கட்டாயமாக நடத்துவோம் என உறுதி அளித்துள்ளார்.

மாணவர் அமைப்பினருடனான இந்த சந்திப்பில் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக ஏபிவிபி தலைவர் R.P.ராமன் மற்றும் துணைத்தலைவர் குமார் துணை செயலாளர் திருமலை குமார் , மாணவ தலைவர் சுரேஸ் , மண்டல அமைப்புச் செயலாளர் பிருத்விராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories