December 5, 2025, 2:50 PM
26.9 C
Chennai

ட்ரம்ப் வெற்றி பெற வேண்டி… அனுமன் கோயிலில் அர்ஜுன் சம்பத் வழிபாடு!

arjun-sampath-in-anjaneyar-temple
arjun-sampath-in-anjaneyar-temple

அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற வேண்டி ஆஞ்சநேயர் கோயிலில் அர்ஜூன் சம்பத் வழிபாடு மேற்கொண்டார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற வேண்டி, நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டார்.

இந்து மக்கள் கட்சி சார்பில், நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற வேண்டும் என அவரது புகைப்படத்தை வைத்து பூஜைகள் நடைபெற்றன.

இந்த வழிபாட்டு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது; நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற வேண்டும்.

இந்திய மக்களும் அதற்கு பிரார்த்திக்க வேண்டும். அவரை ஆதரிக்க காரணம் என்னவென்றால், பாகிஸ்தானுக்கு கொடுத்த நிதியுதவியை நிறுத்தியவர். அரசியல் சாசனம் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டபோது ஆதரித்தார்.

சீனாவில் இருந்து கரோனா தீ நுண்மி பரவி உலக நாடுகள் பாதிக்கப்பட்டபோது, அந்நாட்டுக்கு எதிராக பொருளாதார தடையை விதித்தார். கரோனா தொற்று நோய் சீன தொற்று நோய் என்று காட்டமாக தெரிவித்தார்.

அமெரிக்காவில் இந்திய பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்த அதிபர். அதே போல் இந்தியாவுக்கு ட்ரம்ப் வந்தபோது குஜராத்தில் பிரமாண்ட வரவேற்பு அளித்து பிரதமர் மகிழ்ந்தார்.

பயங்கரவாதத்துக்கு எதிரான ட்ரம்ப் இந்தியாவுக்கு ஆதரவாகவே உள்ளார். அவருடைய வெற்றிக்காக அமெரிக்காவில் உள்ள இந்து மக்கள் கட்சியினர் பணியாற்றி வருகின்றனர்.

நீட் தேர்வு மையங்கள் பயிற்சி அளிக்காமல் தற்கொலையை ஊக்குவிக்கிறது. இறந்தவர்களின் குடும்பத்துக்கு அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு பணம் கொடுக்கும் நிலை உள்ளது.

இவ்வாறு இருந்தால் தமிழகத்தில் நிதிப் பற்றாக்குறை ஏன் வராது. அண்மையில் சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே சிவனடியார் ஒருவர் தற்கொலைக்கு தள்ளப்பட்டார். அதற்கு காரணமான போலீஸ் அதிகாரி கைது செய்யப்படவில்லை.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அருண் என்பவர் கொலை செய்யப்பட்டார். அவர்களது குடும்பத்துக்கு இதுவரை எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை. ஆனால் இஸ்லாமியர், கிறிஸ்தவர் தாக்கப்பட்டால், உயிரிழந்தால், பணம் கொடுப்பதில் இங்கு போட்டி அரசியல் நடக்கிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறேன்.

நீட் தேர்வு எந்த காலத்திலும் ரத்து செய்யப்பட மாட்டாது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியல் காரணங்களுக்காகவே இதனைப் பற்றி பேசுகிறார். லட்சக்கணக்கான ரூபாய்க்கு மருத்துவக் கல்லூரி சேர்க்கை இடம் விற்பனை செய்யப்பட்டு வந்தது. நீட் தேர்வு வந்ததால் தான் ஏழை, எளிய மாணவர்களும் மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. அரசியல் கட்சியினர் மட்டுமின்றி நடிகர் சூர்யா போன்றோரும் நீட் தேர்வு பற்றி தெரியாமல் பேசுகின்றனர் என்றார்.

முன்னதாக ஆஞ்சநேயர் கோயில் முன்பாக ட்ரம்ப் வெற்றி பெற வேண்டும் என்ற வகையில் இந்து மக்கள் கட்சியினர் முழக்கங்கள் எழுப்பினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories