December 5, 2025, 3:49 PM
27.9 C
Chennai

பற்றி எரியும் பாகிஸ்தான்! அமைதி நடவடிக்கையை மீறியதால் தொடரும் இந்தியத் தாக்குதல்!

operation sinthoor - 2025

அமெரிக்காவின் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை நிறுத்தி வைப்பதாக இந்தியத் தரப்பு தெரிவித்திருந்த நிலையில்,  அமைதியைச் சீர்குலைக்கும் வகையில், சொன்ன வாக்கை மீறி இன்று மாலை பாகிஸ்தான் இந்தியப் பகுதிகளில் தாக்குதலை தொடர்ந்து நடத்தியது. இதை அடுத்து இந்தியா தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.  

துப்பாக்கிச் சூடு மற்றும் இராணுவ நடவடிக்கையை நிறுத்துவது குறித்து இந்தியாவும் பாகிஸ்தானும் இன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.

பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்கள் மற்றும் வெளிப்பாடுகளுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து உறுதியான மற்றும் சமரசமற்ற நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வருகிறது. அது தொடர்ந்து அவ்வாறு செய்யும். – இன்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தன் சமூகத்தள பக்கத்தில் தெரிவித்திருந்தார் .

தாக்குதல் நிறுத்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறீத் தாக்குதல் நடத்தியது, இது இரு நாடுகளிடையே மேலும் பதற்றத்துக்கு வழிவகுத்துள்ளது. இந்திய ராணுவம்  கொடுத்த பதிலடியில், பாகிஸ்தான் அனுப்பிய ட்ரோன்கள் அனைத்தும் சுட்டு வீழ்த்தப்பட்டன.

இந்தியா, பாகிஸ்தான் இடையே நடைபெற்று வந்த ராணுவ ரீதியான தாக்குதல்கள் இன்று மாலை 5 மணிக்குப் பிறகு முடிவுக்கு வரும் என்று இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி கூறியிருந்தார். இதனிடையே, பாகிஸ்தான் கெஞ்சியதன் அடிப்படையில் அமைதி ஏற்படுத்தும் விதமாக, தாக்குதல்களை இந்தியா நிறுத்திய நிலையில், முப்படைத் தளபதிகளுடன் பிரதமர் மோடி விரிவான ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் இருந்தனர்.

பாகிஸ்தானின் இந்த அத்துமீறலை ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கண்டித்து சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அவர் தமது பதிவில் “சண்டை நிறுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் காஷ்மீரில் குண்டுசத்தம் கேட்கிறது. அங்கு என்ன நடக்கிறது” என்று கேள்வி எழுப்பினார்.

ராணுவ ந்டவடிக்கையை நிறுத்தும் அறிவிப்புகள் வெளியான அடுத்த 3 மணி நேரத்துக்குள், ஜம்மு காஷ்மீர் எல்வையில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதலைத் தொட்ர்ந்தது.  கதுவா, சுந்தர்பானி, அக்னூர், உதம்பூர், நவ்சேரா உள்ளிட்ட பல பகுதிகளில் பாகிஸ்தானின் அத்துமீறல்கள் தொடர்ந்தன.  பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்கும் வகையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்கி வருவதாகத் தகவல் வெளியானது. 

பாகிஸ்தானின் இந்த முயற்சிக்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்தது. ஜம்மு, ரியாஷி ,ஸ்ரீநகர், ரஜோரி, கந்தர்பால் பகுதிகளில் பாகிஸ்தான் ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது. குறிப்பாக, மாதா வைஷ்ணவி தேவி கோயில், ஸ்ரீநகரில் உள்ள ராணுவ தலைமையக,ம் ஆகியவற்றையும்  பாகிஸ்தான் தாக்க முயற்சித்துள்ளது. ஆர்எஸ்புரா பகுதியில் சிறிய ரக ஆயுதங்கள் வெடிக்கும் சத்தம் கேட்டதால், உடனே மின்சாரம் நிறுத்தப்பட்டது. 

அதேபோல் குஜராத்தின் கட்ச் பகுதியில் பல ட்ரோன்கள் வந்துள்ளது.   இதில் 3 டுரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. பஞ்சாபின் மோகா மாவட்டத்திலும் ட்ரோன் தாக்குதல் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.  பசில்கா, பாட்டியாலாவிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 

இதனிடையே, பாகிஸ்தான் அத்துமீறிய நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த மத்திய அரசின் வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களிடம் கூறியபோது,  இன்று  மாலை போடப்பட்ட தாக்குதல் நிறுத்த நடவடிக்கையை பாகிஸ்தான் மீறியது. அதற்கு தகுந்த பதிலடியை ராணுவம் கொடுத்து வருகிறது என்று குறிப்பிட்டார்.  

இந்நிலையில் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories