December 6, 2025, 5:41 AM
24.9 C
Chennai

விளையாட்டுத் தனமாக ஆதார் எண்ணை பொதுவெளியில் பகிராதீர்கள்…!

aadhar card1 - 2025

புது தில்லி: விளையாட்டுத்தனமாக உங்களுடைய ஆதார் எண்ணை சமூக வலைத்தளங்களில் அல்லது வேறு இணையதளங்களில் பகிர வேண்டாம் என்று ஆதார் எண்ணை வழங்கும்  யுஐடிஏஐ அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அண்மைய சர்ச்சைகளை அடுத்து நேற்று யுஐடிஏஐ அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ஆதார் எண்ணை இணைய தளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு மற்றவர்களுக்கு சவால் விடுப்பதை தவிர்க்க வேண்டும். இது போன்ற செயல்களை ஏற்றுக் கொள்ள இயலாது. இவ்வாறு ஆதார் எண்ணைப் பகிர்வதைத் தவிர்ப்பது நல்லது. இதுபோன்று பகிரங்கமாகப் பகிர சட்டத்தில் இடமில்லை – என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆதார் எண் ரகசியங்கள் கசிவது குறித்தும், ஆதார் எண்ணைக் கொண்டு ஒருவரின் தனிப்பட்ட தகவல்களைப் பெற்று விடலாம் என்றும் ஊடகங்களில் ஹேக்கர்கள் கூறி வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டிராய் தலைவர் சர்மா, சமூக வலைதளத்தில் தனது ஆதார் எண்ணை வெளியிட்டு, தனது தகவல்களை வெளியிட முடியுமா என சவால் விடுத்தார்.

இருப்பினும் அடுத்த சில மணி நேரங்களில் அவரது  மொபைல் எண், மாற்று மொபைல் எண், முகவரி, இமெயில் முகவரி, பிறந்த தேதி, பான் நம்பர், பிறந்த மாநிலம், தற்போது வசிக்கும் வீட்டின் முகவரி உள்ளிட்ட தகவல்களை ஆன்டர்சன் என்ற ஹேக்கர் வெளியிட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால், அவர் ஆதார் எண்ணைக் கொண்டு அவ்வாறு வெளியிடவில்லை என்றும், வேறு சில பான் எண், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவற்றைக் கொண்டே இத்தகவல்களைப் பெற்றுள்ளார் என்றும் விளக்கம் கூறப்பட்டது. எனினும், ஒருவரின் தனிப்பட்ட விரல் ரேகை, கருவிழி உள்ளிட்ட அங்க அடையாளங்கள் ஆதார் ஆணையத்தால் ரகசியமாகப் பாதுகாக்கப் படுகின்றன. எனவே ஆதார் பாதுகாப்பானதுதான் என்றாலும், பொதுவெளியில் அவற்றை வெளியிட்டு சவால் விடுக்க வேண்டாம் என்று யுஐடிஏஐ கூறியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories