உறுதியாகிறது அதிமுக., பாஜக., கூட்டணி!

edappadi modi - 2026

அதிமுக கூட்டணி இறுதி வடிவம் பெறுகிறது! அதில், பாஜக, புதிய தமிழகம், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெறுவது உறுதியானதாகத் தகவல் வெளியானது. பாமக. மட்டும் இழுபறியில் உள்ளது என்று தெரிகிறது.

இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும். கூட்டணி தொடர்பாக தேசிய, மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்று கூறினார்.

தேமுதிக 4 இடங்கள் என்றும், பாஜகவுக்கு 9 இடங்கள் என்றும் பேசப் பட்டதாகக் கூறப் படுகிறது. பாமக நிலை மட்டும் உறுதியாகவில்லை என்றும், பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே நேற்று பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி கூட்டணி குறித்து மறுப்பு தெரிவித்தார். வழக்கம் போல் பாமக.,வின் துவக்க கால பேரம் பேசும் உத்தியை இந்தத் தேர்தலிலும் கடைப்பிடிக்க அன்புமணி தனது தந்தை ராமதாஸைப் போல் முயன்று வருகிறார்.

பேச்சுவார்த்தை நடக்கிறது எனச் சொன்னேன் ஆனால் யாருடன் என நான் சொல்லவில்லை. அதிகாரபூர்வமாக நானோ மருத்துவர் ஐயாவோ சொல்லாத பட்சத்தில் பொய்யான செய்திகளை திட்டமிட்டு பரப்புகிறார்கள் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். அதிகாரபூர்வமாக அறிவிக்காத பட்சத்தில், தவறான செய்திகள் பரப்பப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். 

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

திமுக., அதிமுக., இரு தரப்பிலும் பாமக., கூட்டணி குறித்துப் பேசிவருவதாக வெளியான தகவல் அதன் பழைய பேரம் பேசும் உத்தியை வெளிப்படுத்துகிறது என்று விமர்சனம் எழுந்தது.

இதனிடையே, திமுகவுடன் கூட்டணி அமைவது உறுதி என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உறுதி கூறியுள்ளார். பாமக குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், கூட்டணி குறித்து காலையில் ஒன்று, மாலையில் ஒன்று என பேசுகிறது பாமக என்று கூறியவர், அதிமுகவை மிரட்டி கூட்டணி வைக்க பாஜக முயற்சிக்கிறது ஆனால் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இல்லை என்று கூறினார்.

ஆனால், திமுக., கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் மதிமுக.,வுக்கும் தலா ஒரு தொகுதியை மட்டுமே திமுக., ஒதுக்கும் என்று கூறப்படுகிறது. அதுவும் கூட, இருவருமே உதய சூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று திமுக., நிர்வாகிகள் கூறுவதாக செய்திகள் வெளியாகின. இதனால் இருவருமே அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், திமுக., கூட்டணி உறுதி என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories