ராம்குமார் தற்கொலை: பேச்சும் பின்னணியும்

ரா.கு. தற்கொலை(?)க்கு முன் – 1 (ஆகஸ்ட் மாத பதிவு!)
*
ராம்குமார் குற்றவாளி என்று காவல்துறை தரும் ஆதாரம் என்ன ?
ராம்குமார் ஸ்வாதி பின்தொடர்ந்து வந்ததற்கான செல்போன் சிக்னல் தொடர்ச்சியாக காலை மாலை இருவேளையும் ஸ்வாதி செல் போன் சிக்னல்செல்லும் இடங்களில் எல்லாம் ராம்குமாரின் சிக்னல் இருந்துள்ளது.
அடுத்ததாக நேரில் பார்த்த சாட்சிகள் இவை இரண்டும் முக்கிய சாட்சிகள்.
இப்போது ராம்குமாரின் வழக்கறிஞர் என்ன செய்ய வேண்டும்??
ராம்குமார் ஸ்வாதியை பின்தொடரவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும்..
காவல்துறை குறிப்பிடும் நேரத்தில் ராம்குமார் எங்கே இருந்தார் யாரிடம் பேசி கொண்டு இருந்தார் என்பதை ஆதார பூர்வமாக எடுத்துவைக்க வேண்டும்..
நேரில் பார்த்ததாக சொல்லப்படும் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்து அவர்களிடம் இருந்து உண்மையை வெளிவர வைக்கவேண்டும்….
அதை விடுத்தது இந்த வக்கீல் வண்டு முருகன் என்ன செய்கிறார் ??
தினமும் மீடியா முன்பு வந்து நின்று கொண்டு
**ஸ்வாதிக்கு வெர்ஜினிட்டி இல்லை ..
ஆதாரம் எங்கே என கேட்டால் இல்லை என்கிறார்.
**ஸ்வாதிக்கு திருமணம் ஆகிவிட்டது என்கிறார்.
ஆதாரம் எங்கே என கேட்டால் இல்லை என்கிறார்.
**ஸ்வாதிக்கு மதம் மாற இருந்தார் நோம்பு இருந்தார் என்கிறார்.
ஆதாரம் எங்கே என கேட்டால் இல்லை என்கிறார்.
**ஸ்வாதி நூறுக்கு மேற்பட்ட சிம்காடுகளை பயன்படுத்தினார் என்கிறார்.
ஆதாரம் எங்கே என கேட்டால் இல்லை என்கிறார்.
**ஸ்வாதிக்கு பெங்களூரில் திருமணம் முடிந்துவிட்டது என்கிறார்.
ஆதாரம் எங்கே என கேட்டால் இல்லை என்கிறார்.
**ஸ்வாதி அவர் அப்பா இல்லை.வளர்ப்பு அப்பா என்றார் .. பிறகு வைப்பாட்டி மகள் என்றார் .
ஆதாரம் எங்கே என கேட்டால் இல்லை என்கிறார்.
**ஸ்வாதி வாட்ஸுப் பேஸ் புக்கில் யாருடனெல்லாம் பேசி உள்ளார் என்ற தகவலை காவல் துறை வெளியிட வேண்டும் என்கிறார். அதாவது அந்த பெண் பலருடன் தொடர்பு வைத்து இருந்தார் என சொல்ல வருகிறார்
**ஸ்வாதி லேப்டாப்பை எல்லோருக்கும் காமிக்க வேண்டும் என்கிறார்
ஒரு பெண் பிள்ளையை பெற்றெடுத்து தினம் தினம் எப்படி வீடு திரும்புவாள் என்று வயிற்றில் மரண பயதோடு பள்ளிக்கு அனுப்பி கல்லூரிக்கு அனுப்பி வேலைக்கு அனுப்பி தினம் தினம் அவள் வீடு திரும்பும் வரை வயிற்றில் நெருப்பை கட்டி கொண்டு திரிந்த தகப்பனே தான் சீராட்டி வளர்த்த பெண்ணை வாயை இரண்டாக பிளக்குமாறு நட்ட நடு ரோட்டில் இருகூறாக வெட்டி விட்டாராம் ..
வெட்டணும்னு நினைத்தவர் ஏன்டா ரயில்வே ஸ்டேஷன்ல வெச்சு வெட்டணும் ??
எங்காவது ஓரமா வைத்து வெட்டி இருக்கலாம் .
கொஞ்சம் விஷம் குடுத்து கூட கொன்னு இருக்கலாம்.
இப்படி எல்லாம் கேள்விகளை எழுப்பி பார்ப்பவர்களுக்கு இவளை வெட்டியது தவறே இல்லை என்ற எண்ணத்தை தோன்ற வைப்பதுதான் எண்ணமா ?
ஏண்டா வக்கீல் வண்டுமுருகா ராம்குமாரை விடுதலை செய்ய வாதாட..
ராம்குமார் காவல்துறை குறிப்பிட்ட நாளில் எங்கே இருந்தார் என்ற ஆதாரத்தை முதலில் மீடியவிடம் காட்டுடா அதை விட்டு விட்டு நியாயம் கேட்டு நிற்கும் குடும்பத்தை தரக்குறைவாக கேவலமாக பேசினால் அவர்களே இந்த வழக்கை விட்டு விலகிவிடுவார்கள் என்றும், தாழ்த்த பட்டவன் என்பதாலேயே ராம்குமார் தண்டிக்க போட்டுவிட்டான் என்று கடைசில் எல்லாம் முடிந்த பின்பு ஊளை விட்டு அவனை தியாகி ஆகும் வேலையை விட்டு விட்டு, அவன் நிரபராதி என்று நினைத்தால் அதற்காக வாதாடு. அதை விட்டு விட்டு இறந்த பெண்ணையும் அந்த குடும்பத்தையும் இதற்கு மேல் அசிங்க படுத்தாதே..
இதை விட ஒரு கொடுமை தமிழச்சி சொல்லிட்டார் சொல்லிட்டார் என்று குதிக்கிறானுங்க ..
தமிழச்சி என்கிற யுமா இதுவரை எவ்ளோ ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்து முகநூலில் அசிங்க பட்ட கதை தெரியாது போல ..
கேவலம்டா சாதியை தூக்கி கொண்டு சண்டை கேள்வி கேட்கவேண்டும் என்று நினைக்கும் கும்பல் பதிவை நன்கு படித்து விட்டு வரவும் ..
ராம்குமார் குற்றவாளியா அல்லது குற்றவாளி இல்லை என்னவோ இந்த பதிவு சொல்லவில்லை ராம்குமார் நிரபராதி என்று நினைத்தால் அவரை எப்படி காப்பாற்ற வேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கம்
***
ரா.கு., தற்கொலை(?)க்குப் பின்: (செப்டம்பர் மாத பதிவு)
*
ராம்குமார் குற்றவாளி அல்ல என கூறுபவர்களுக்கு எனது சில கேள்விகள்

ALSO READ:  முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

1) சுவாதியின் ரத்தகரை படிந்த சட்டை எப்படி ராம்குமார் அறைக்கு வந்தது??
2) சுவாதியின் செல்போன் எப்படி ராம்குமாரிடம் வந்தது??
3) கொலைநடந்த அன்றே அவன் அறையை விட்டு விட்டு அவசரமாக சொந்த ஊர் செல்ல வேண்டிய அவசியம் என்ன??
4) அவனது செல்போன் டவர் எப்படி கொலையோடு ஒத்து போனது ??
5) தவறு செய்யாத போது எப்படி அவனால் மிக சரியாக நடித்து காட்ட முடிந்தது??
6) அவன் குற்ற்றவாளி இல்லை என்றால் சம்பவம் நடந்த நேரத்தில் ராம்குமார் எந்த இடத்தில் யாருடன் இருந்தான்? அதையேன் இதுவரை ராம்குமார் தரப்பு விளக்கவில்லை?
7) போலீஸ் கேசை முடிப்பதற்காகவோ அல்லது யாரையோ காப்பாற்ற முயல்வதாக இருந்தால்கூட சென்னையிலிருந்து 600 km தொலைவிலுள்ள ராம்குமாரை ஏன் குற்றவாளியாக்க வேண்டும். சென்னையில் வேறு அப்பாவிகள் யாருமே இல்லையா.???
8) கைது செய்யும் போது போலீஸ் தான் ராம்குமார் கழுத்தை அறுத்ததாக அவனது தந்தை இரண்டு நாள் கழித்துதான் கூறினார் ஏன் அன்றே அவர் அதை சொல்லி இருக்கலாமே???
9) ராம்குமார் எந்த சமுகத்தை சார்ந்தவன் என்று தெரியாதவரை இந்த வழக்கு சரியான பாதையில் சென்றுக் கொன்டிருந்தது,
10) ராம்குமாரை கைது செய்தபோது அரசியல் கட்சி தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர் திருமாவளவன் உள்பட. தற்போது உள்ளாட்சி தேர்தல் நெருங்குவதால் பிணத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட பார்கிறார்கள் .
இவற்றிற்கான உங்களுடைய பதில் என்ன?

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

*
பின்குறிப்பு:
இது இரண்டும் முகநூலில் யாரோ எழுதி பகிர்ந்தது. நான் எழுதியதில்லை!
இந்த விவகாரத்தில் துவக்கம் முதலே நான் ஆர்வம் காட்டவில்லை! பின்னணி குறித்து எனக்கு வேறு சில அனுமானங்கள் உண்டு!
எனக்கு பெரும் வருத்தத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்திய ஒரே விஷயம்…
யாரோ ஒரு அனாமதேயப் பெண்மணி (உள்நாட்டில் கூட இல்லை; வெளிநாட்டில் இருந்து கொண்டு, எந்த விதத்திலும் நம் நாட்டின் சட்ட திட்ட நடைமுறைகளுக்கு உட்படாத பாதுகாப்பு வளையத்துக்குள் இருந்து கொண்டு, ஏதோ கதைகளை புனைந்து கொண்டு உளறிக் கொட்டுகிறார் என்றால், அதையெல்லாம் பெரிய எவிடன்ஸ் போல், யாரோ ஒரு பெரிய தலைவர் சொல்வது போல் நினைத்துக் கொண்டு – வெரி வெரி சீப் என்று சொல்லத்தக்க வகையில் இருப்பதை எல்லாம் பிரசுரிக்கவும், பெரிய விஷயமாக்கவும் எண்ணி செயல்பட்ட சூனிய விகடனை நினைத்துதான்! இவ்வளவு கேவலமாக இதழியல் துறையை அசிங்கப் படுத்துவார்கள் என்பதை ஜீரணிக்க இயலவில்லை!
இதற்குப் பதில் ஆனந்த விகடனுக்கு கதைகளை எழுதி அனுப்பியிருக்கலாம்!
இதற்குப் பெயர்தான் புலனாய்வோ?
நண்பர் விகேஷ் உள்பட உடனிருந்த சிலரை நினைத்துப் பார்க்கிறேன்!

ALSO READ:  அதிர்ச்சி... அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories