தினசரி ஒரு வேத வாக்கியம்: 5. அந்தர்யாமி யார்?

dhinasari oru vedha vaakyam

தினம் ஒரு வேத வாக்கியம்.
5.அந்தர்யாமி யார்?

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா 
தமிழில்: ராஜி ரகுநாதன் 

“ஆத்மா௨ஸ்தர்யாம்யம்ருத:”
— பிரஹதாரண்யக உபநிஷத்.

“ஆத்மா அந்தர்யாமி. அமிர்தம்”

பிரபஞ்சம், பரமாத்மா இவ்விரண்டுக்கும் உள்ள தொடர்பை கூறும் அற்புதமான விளக்கத்தைக் வேதாந்த சாஸ்திரம் போதிக்கிறது.

“யார் சகலப் பிராணிகளிடத்தும் இருந்து சகலப் பிராணிகளையும் நடத்துவிக்கிறாரோ – ஆனால் சகல ஜீவர்களும் யாரை அறியாவோ – யாருக்கு சகல ஜீவிகளும் சரீரமோ –  அனைவரிலும் இருந்துகொண்டு (அந்தர:) நடத்தி வைத்தபடி (யமயதி) உள்ளாரோ அவரே ஆத்மா – அவர் சாஸ்வதமானவர்” என்று விவரித்து அதற்கும் முன்பாக “பஞ்ச பூதங்களிலும் இருந்துகொண்டு யார் நடத்துவிக்கிறாரோ, யாரை பஞ்சபூதங்களும் அறியாதோ” என்று விஸ்தாரமான விவேகத்தை அளிக்கிறது உபநிஷத்து.

அந்தர்யாமியாக விளங்கும் பரமாத்மாவை உணர்வதற்கு ஞானச் சுரங்கமான உபநிஷத்து எத்தனை அற்புதமாக விவரிக்கிறதோ கவனிக்கவேண்டும்.

கண்ணில் தென்படும் பஞ்சபூதங்கள், புலன்கள், உடல்கள் – இவை  பரமாத்மா அல்ல. அதற்காக இவற்றை ‘இல்லை’ என்று கூறுவதற்கும் வழியில்லை.

ஆனால் அவற்றின் உள்ளே சைதன்யமாக  இருப்பவன் பரமாத்மா. உண்மையில் சைதன்யத்தால்தான் இவை உருவாகின. சைதன்யத்தால்தான்  இருப்பு பெற்றுள்ளன. மீண்டும் சைதன்யத்தில்  லீனமாகிவிடுகின்றன.

பஞ்சபூதங்கள், உடல்கள்… போன்ற அனைத்திலும் சைதன்யம் உள்ளது என்ற பார்வையோடு நோக்கினால்… சைதன்யத்தால்தான் இவை அனைத்தும் நடத்துவிக்கப்படுகின்றன என்பதை உணரலாம். ஆனால் நடத்துவிக்கப்படும் பிரபஞ்ச உயிர்களின் உடல்கள் நடத்துவிக்கும் சைதன்யத்தை அறிய இயலாமல் உள்ளன.

அனைத்தையும் எந்த கண்ணால் பார்க்கிறோமோ அந்தக் கண்ணை நாம் பார்க்க இயலாது அல்லவா? அதே போல் அனைத்தையும் நடத்துவிக்கும் சைதன்யத்தை அறிய இயலாமல் போகலாமே தவிர, இல்லை என்று கூற இயலாது. தென்படவில்லை என்பதால் கண் இல்லை என்று கூறுவோமா?

வெளிப்பார்வைக்கு உடல்கள் தென்படும். அந்தர்முக பார்வையால் சைதன்யத்தை உணர இயலும்.

அந்த சைதன்யமே ‘நான்’ எனப்படும் ஆத்மா. அது அழிவில்லாதது.

அழியும் குணம் கொண்ட உடல்களால் ‘நான்’ என்னும் சைதன்யம் இருப்பதில்லை. உடலினுள்ளே அதனை நடத்துவிக்கும் சைதன்யம் உள்ளது. அதனால்தான் அது அந்தர்யாமி எனப்படுகிறது.

நம்மிடத்தில் உள்ள ‘நாம்’ என்ற சைதன்யம் அந்த அந்தர்யாமியுடையதே! நம் ‘இருப்பு’ அந்த ‘அமிர்த’ தத்துவத்தால் ஆனது என்ற சத்தியத்தை உள்ளது உள்ளபடி  உணர்ந்து கொள்வதே ஞானம்.

அதனை அடைந்தவர் ‘அமிர்தன்’ ஆகிறார். உடல்களுக்கு அடைக்கலமான சைதன்யத்தை அறிவதே ஆன்மிக சாதனையின் பரமார்த்தம். 

அந்த அந்தர்யாமியையே பக்தர்கள் பகவான், ஈஸ்வரன், பகவதி என்று குறிப்பிடுகையில், ஞானிகள் பிரம்மா, ஆத்மா என்று அழைக்கிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories