அண்ணா என் உடைமைப் பொருள் (18): நெருங்கியும் தொலைவாகவும் ஒருங்கே இருக்கும் நிலை!

anna

அண்ணா என் உடைமைப் பொருள் – 19
நெருங்கியும் தொலைவாகவும் ஒருங்கே இருக்கும் நிலை
– வேதா டி. ஸ்ரீதரன் –

ஒருமுறை நான் அண்ணாவைப் பார்க்கச் சென்றிருந்த போது இரண்டு பேர் அவருடன் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் அண்ணாவுக்கு நெருங்கிய உறவினர். இன்னொருவர் எனக்கு அறிமுகம் இல்லாதவர்.

அண்ணா, தனக்கு வந்திருந்த தீபாவளி பட்சணங்கள் நிறைய எடுத்து என்னிடம் கொடுத்தார். சாப்பிட்டவாறே அவர்கள் பேசுவதையும் கவனித்தேன்.

அந்த உரையாடலை என்னால் ஓரளவு மட்டுமே புரிந்து கொள்ள முடிந்தது. அந்தப் புதிய நபர் ஶ்ரீவித்யா உபாசகர் என்பது மட்டும் புரிந்தது. அந்த உபாசனை விஷயத்தில் அவருக்கு குரு தேவை என்பதால் சிலரை அணுகி இருக்கிறார். அந்த அனுபவங்களை அவர் அண்ணாவிடம் விவரித்துக் கொண்டிருந்தார். அதுவரை அவர் சந்தித்த பெரியவர்கள் யாரும் அவரைச் சீடராக ஏற்கத் தயாராக இல்லை. கடைசியாக யாரையோ குறிப்பிட்டு அவரைப் போய்ப் பார்க்க இருப்பதாகத் தெரிவித்தார். அவர் தனது சிஷ்யராக ஏற்றுக் கொள்வார் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.

அப்போது அண்ணா அவரிடம், ‘‘என் கிட்ட எதற்காக வந்தாய்?’’ என்று கேட்டார். உடனே அவர், ‘‘பெர்மிஷன் வாங்கறதுக்காக வந்தேன்’’ என்றார்.

ALSO READ:  தாயை வணங்கினால் தறுதலைகளுக்கு ஆத்திரமா?

‘‘என்ன பெர்மிஷன்? அவர் கிட்ட சிஷ்யனாகறதுக்கா, இல்லேன்னா வேலையை விடறதுக்கா?’’ என்று கேட்டார்.

அந்த மனிதர் சிரித்துக் கொண்டே, ‘‘இரண்டு விஷயத்துக்காகவும் தான், அண்ணா’’ எந்றார்.

Ra Ganapathy1 - 2026

‘‘முதல்ல நீ அவரைப் போய்ப் பாரு. அவர் உன்னை ஏத்துக்கறாரான்னு தெரிஞ்சுக்கோ. அதுக்கப்பறம் வேலையை விடறது பத்தி அவர் கிட்டயே கேட்டுக்கோ. அவர் சொல்றபடியே செய்’’ என்றார்.

அந்த மனிதர் மிகுந்த மகிழ்ச்சியுடன் கிளம்பினார்.

அவர் கிளம்பியதும் என்னிடம் அண்ணா ஒரு சிபிஐ வழக்கின் பெயரைக் குறிப்பிட்டார். அந்த நாட்களில் அந்த வழக்கைப் பற்றிக் கேள்விப்படாதவர்களே இருக்க முடியாது. மிக உயர்ந்த இடத்தில் இருந்த ஒரு மனிதர் மீதான ஊழல் கேஸ் அது. இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவில் மிகவும் பிரபலமான வழக்குகளில் அதுவும் ஒன்று. அதைப்பற்றி எனக்குத் தெரியுமா என்று கேட்டார்.

‘‘கேள்விப்பட்டிருக்கேன், அண்ணா’’ என்றேன்.

‘‘இப்போ வந்துட்டுப் போனானே, இவன் தான் அந்த கேஸ்ல சிபிஐ லாயர். டெல்லியில …..….. கண்ணில விரலை விட்டு ஆட்டறான். அவனுக்கு இவனை நினைச்சாலே சிம்ம சொப்பனமா இருக்கு. இவன் என்னடான்னா வேலையை விடறதுக்கு பெர்மிஷன் கேட்கறான்’’ என்று சிரிப்புடன் கூறினார்.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

அண்ணா சொன்ன தகவல் என்னைத் திடுக்கிடச் செய்தது. வீடு திரும்பும் போது அந்த மனிதரையே நினைத்துக் கொண்டு வந்தேன். பொருளாதாரத்திலோ சமூக அந்தஸ்திலோ உச்சத்தில் இருப்பது வேறு, ஆன்மிகத் தேடலில் நிறைவை அடைவது என்பது வேறு. இந்த உண்மையை எனக்குத் துல்லியமாகப் புரிய வைத்த உதாரணம் அந்த மனிதர்.

இந்தக் காலகட்டத்தில் நான் ஓரளவு அண்ணாவைப் புரிந்து கொண்டிருந்தேன். அண்ணா வெளியுலக அங்கீகாரங்களை ஒரு பொருட்டாக நினைக்காத மனிதர் என்பது எனக்கு நன்றாகப் பரிசயமாகி இருந்தது.. எனினும், ‘‘தனக்கு வெளியே ஒரு தேடலும் இல்லாத மனிதரால் தான் அவ்வாறு இருக்க முடியும்’’ என்பதை அன்றுதான் நான் புரிந்து கொண்டேன்.

இந்தக் காலகட்டத்தில் தான், நானும், என்னைச் சேர்ந்த வேறு சிலரும் அண்ணாவுடன் நெருங்கிப் பழக ஆரம்பித்தோம். நெருங்கி என்று நான் சொன்னாலும் அது நெருங்கி இருக்கும் நிலை அல்ல. நெருங்கியும் தொலைவாகவும் ஒருங்கே இருக்கும் நிலை அது. அவர் எங்களுக்கு மிகமிக அருகில் இருந்தார், மிகமிகத் தொலைவிலும் இருந்தார்.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories