‘சமூகநீதிக் காவலர்’ வி.பி.சிங் (விஸ்வநாத் பிரதாப் சிங்)

vpsingh - 2026

வி.பி சிங் என்னும் விஸ்வநாத் பிரதாப் சிங் 1931இல் ஜூன் மாதம் 25 ஆம் தேதி உத்திரபிரதேசத்தில் பிறந்தார். “தையா ” சமஸ்தானத்தில் ராஜ குடும்பத்தில் பிறந்தார். இவர் பிறந்து என்னவோ உத்திர பிரதேசத்தில் ஆனால் மற்றொரு பிறவி என்று ஒன்று எனக்கு இருந்தால் நான் தமிழ்நாட்டில் தமிழனாக பிறக்க விரும்புகிறேன் என்று கூறியவர் விபி சிங்.

தனது ஐந்து வயதில் மாண்டாவின் ராஜ பகதூர் ராம் கோபால் சிங் என்பவரால் தத்தெடுக்கப்பட்டார். செல்வ செழிப்பான குடும்பத்தில் வளர்ந்ததால் நாட்டில் நடக்கும் பிரச்சனைகள் மக்களின் போராட்டங்கள் பற்றி துளியும் அறியாமல் இருந்தால் வி பி சிங்.

அலகாபாத் பல்கலைக்கழகத்தில் தனது வழக்கறிஞர் படிப்பை பயின்றார் அப்பொழுது கல்லூரியில் நடந்த தேர்தலில் நின்று வெற்றி பெற்று தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார்.

பூமி தான் இயக்கத்தில் ஆர்வம் காட்டிய வி பி சிங். தனது 26 வது வயதில் தனது பண்ணை வீட்டையும் அதனை சுற்றி இருந்த பெரும் நிலங்களையும் ஏழை மக்களுக்கு தானமாக வழங்கினார். இதனைத் தொடர்ந்து தனது கிராமத்தில் இருக்கும் ஏழைகளின் பிரச்சனைகளை கேட்டறிந்து அதனை தீர்த்து வைத்தார் வி. பி. சிங். இந்த செயல்பாடுகள் என எளிய மக்களிடம் அவரின் செல்வாக்கை உயர்த்தியது.

தன்னை அரசியலில் ஈடுபடுத்த விரும்பிய வி. பி. சிங் தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார்.

ALSO READ:  தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

1961-இல் உத்திரப்பிரதேசத்தில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் வி. பி. சிங். பின் 1971 இல் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். வர்த்தகத் துறையின் துணை அமைச்சராக 1974 இல் பொறுப்பேற்றுக் கொன்றார். நெருக்கடி காலகட்டத்தில் பதுக்கப்பட்ட உணவுப் பொருட்களை வெளிக்கொண்டு வந்து இந்திய மக்களிடம் நற்பெயர் பெற்றார்.

1980 இல் உத்திர பிரதேசத்தின் முதல்வராக பொறுப்பேற்றார். அந்த காலகட்டத்தில் கொள்ளைக்காரர்களின் பிடியில் சிக்கித் தவித்த தனது மாநிலத்தை மீட்டு எடுக்க முடியாத காரணத்தால் தனது முதல்வர் பதவியை துறந்தார்.

1984 இல் ராஜீவ் காந்தியால் நிதி அமைச்சர் ஆக்கப்பட்டார் வி பி சிங். அப்பொழுது வரியைப்பு செய்த பெரிய நிறுவனங்களில் பெயர்களை வெளியிட்டார். பின் அண்ட் நிறுவனங்கள் மீது அமலாக்க துறையில் நடவடிக்கைகளை எடுக்கச் செய்தார்.

அம்பானி மற்றும் அமிதாப்பச்சன் இதில் விதிவிலக்கல்ல அவர்களின் இல்லங்களிலும் அமலாக்கத்துறை சோதனை செய்தது. இத்தகைய நடவடிக்கையால் ராஜீவ் காந்தி அவரிடமிருந்த நிதி துறையை பறித்தார். 1987இல் வி பி சிங் பாதுகாப்பு துறையில் அமைச்சராக பதவி ஏற்றார்.

அங்கேயும் தனது நேர்மையை கைவிடாமல் நீர் மூழ்கிக் கப்பல் மற்றும் போபஸ் பீரங்கி வாங்கியதில் நடந்த ஊழலை வெளிக்கொண்டு வந்தார். இதனால் தனது நாட்டு மக்களிடையே வி பி சிங்குக்கு பெரும் ஆதரவு கிடைத்தது.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஆனால் மக்களிடையே காங்கிரஸ் ஆட்சியின் மீது அதிருப்தி நிலவியது. இதனால் கோபம் கொண்ட ராஜீவ் காந்தி 1987 ஏப்ரல் நாலாம் தேதி அவரது அமைச்சர் பதிவை பிடுங்கினார்.

அதன் பிறகு ஜனமோர்ச்சா என்னும் புதிய கட்சியை தொடங்கினார். பிபிசிங் அந்த காலகட்டத்தில் அலகாபாத் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு ஒரு லட்சத்து 23 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

1988 இல் ஜனதா கட்சி லோக் தளம் காங்கிரஸ் கட்சிகளை ஒன்று சேர்த்து ஜனதா தளம் என்னும் புதிய கட்சியை நிறுவினார் வி பி சிங்.

நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து காங்கிரசுக்கு எதிராக மாநில கட்சிகளை ஒன்று திரட்டி தேசிய முன்னணி எனும் புதிய கூட்டினியை உருவாக்கினார். 1989 இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஊழல் காங்கிரஸ் என்னும் பிரச்சாரத்தை கையில் எடுத்து அதனை வென்றும் காட்டினார்.

இதன் விளைவாக 1989இல் நாட்டில் ஏழாவது பிரதமர் மந்திரியாளர் வி பி சிங்.

இவரது ஆட்சியில் மக்களுக்கு பயன்படும் மகத்தான திட்டங்கள் பல கொண்டுவரப்பட்டன. தமிழ்நாட்டிற்கு இன்று வரை காவிரி நீர் கிடைக்க உத்தரவு விட்டவர் வி பி சிங்.

1990 ஆம் ஆண்டு மண்டல் கமிஷனை தூசி தட்டி எடுத்து பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக 27 சதவீத இட ஒதுக்கீடு நாடாளுமன்றத்தில் அமல்படுத்தினார்.

வி.பி.சிங் ஆட்சியை சமூக நீதி ஆட்சியாகவும் வி. பி. சிங்கை சமூக நீதி நாயகனாகவும் இந்தியா மக்கள் கொண்டாடினர்.

ALSO READ:  தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

அக்டோபர் 10 1990 ஆம் ஆண்டின் இவரது அரசு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க தவறியதால் அவரது ஆட்சி கலைக்கப்பட்டது.

இன்று என் கால்கள் உடைக்கப்பட்டு இருக்கலாம் ஆனால் நான் அடைய வேண்டிய இலக்கை என்றும் அடைந்து விட்டேன் அரசியலில் இறுதியானது கடைசியானது என்று எதுவும் இல்லை இவ்வாறு நாடாளுமன்றத்தில் கடைசியாக கர்சித்தார் விபி சிங்.

சிறிது காலம் கழித்து சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டார் மற்றும் ரத்த புற்றுநோயும் அவரை தாக்கியது இதனால் 2008 ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி மரணத்தை தழுவினார் வி. பி. சிங்.

பிறப்பால் செல்வந்தர் காங்கிரஸ் கட்சியின் ஊழலை மக்களிடையே திரையிட்டு காட்டியவர் சமூகநீதி காவலர் தமிழர்கள் மீது தமிழ்நாட்டின் மீதும் அளவற்ற அன்பு கொண்ட விபி சிங் தனது 77 ஆம் வயதில் மரணத்தை தழுவினார்.

  • கட்டுரை : ஓம் பிரகாஷ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories