சமாதிக்கு எதிரான பொது நலவழக்கு… நீதிமன்றம் ஏன் அபராதம் விதிக்கவில்லை!?

karunanithi square2 - 2026

மறைந்த திமுக., தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் வேண்டும் என்று கோரி ஒரு போராட்டம். சட்டப் போராட்டம். நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டி இரவு இரவாக எழுப்பி, நீதிபதிகள் அதை அவசர வழக்காக கருதி.. என அனைத்து விதமான நாடகங்களும் ஒரே நாளில் அரங்கேறின.

இதை நாடகம் என்று சொல்வதற்கு முக்கியக் காரணம், ஜெயலலிதா சமாதிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்கள் தங்கள் மனுவை ஒரே நேரத்தில் சொல்லி வைத்தபடி திரும்பப் பெற்றதும், டிராபிக் ராமசாமி மனு தள்ளுபடி செய்யப் பட்டதும்தான்!

இதன் பின்னணியில் பல்வேறு கதைகள் கூறப்பட்டாலும், அரசியல் காரணங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு, நீதிமன்றத்தின் நடவடிக்கை குறித்து யோசிக்க வேண்டியுள்ளது.

பொதுவாக, நியாயமான காரணங்களுக்காக ஒரு சமானிய மனிதன் பொதுநல வழக்கு போட்டால், நீதிமன்ற நேரத்தை வீணடித்ததாகக் கூறி லட்சங்களில் அபராதம் விதிக்கும் நீதியரசர்கள், ஒரே நேரத்தில் நான்கு பேரையும் ஒரு வழக்கை திரும்பப் பெற எப்படி… ஏன் சம்மதித்தனர்?

பா.ம.க.,வைச் சேர்ந்த பாலு, துரைசாமி, ராமசாமிக்கு அபராதம் விதிக்காதது ஏன்? குறைந்த பட்சம் ஒரு கண்டனத்தைக் கூட பதிவு செய்யாதது ஏன்? இனிவரும் அனைத்து பொதுநல வழக்குகளிலும் இதே நிலையைத் தான் நீதிமன்றம் பின்பற்றுமா?

கருணாநிதியை மெரினாவில் புதைப்பதற்கு தங்களுக்கு ஆட்சேபம் இல்லை என்று இவர்கள் சொல்வதை எதன் அடிப்படையில் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது? மெரினா என்ன இவர்களின் வீட்டுச் சொத்தா அல்லது இவர்களின் மூதாதையர் பட்டா போட்டு எழுதிக் கொடுத்திருக்கிறார்களா?

இந்த மனுவை விசாரித்துக் கொண்டிருக்கும் போது, இத்தனை நாட்கள் வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்த போது, இத்தனை நாட்கள் நீதிமன்ற நேரத்தை வீணடித்து, தேவையற்ற வழக்குச் செலவுகளை அரசுக்கும் இழுத்துவிட்டு, இப்படி எத்தனையோ பின்னடைவுகள் இருந்தபோதும், ஒட்டுமொத்தமாக நாங்கள் ஏதோ வழக்கு போட்டோம்.. இப்போது திரும்பப் பெற்றுக் கொள்கிறோம் என்று வேறு ஏதாவது ஒரு பொதுநலன் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் வேறு யாரேனும் இப்படி சொல்லிச் செயல்பட்டிருப்பார்களேயானால், நீதிமன்றம் அதே விதமான அணுகுமுறையைக் கையாளுமா?

எதை நோக்கிய பயணத்தில் நீதித்துறை செல்கிறது?  என்பதுதான் பொதுமக்களிடையே இந்தச் சம்பவத்துக்குப் பின்னர் தொக்கு நிற்கும் கேள்வி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories