December 6, 2025, 3:06 AM
24.9 C
Chennai

நிதிக்குழுவின் மூலம் தமிழகத்திற்கு வரும் அபாயம்

niti ayog modi - 2025
இந்திய அரசின் நிதிக் குழுவின் தலைவர் என்.கே.சிங் தலைமையில் நிதிக்குழுவின் அதிகாரப்பூர்வமற்ற கூட்டம் புனேவில் நடந்துள்ளது. அதில் பொருளாதார நிபுணர்களுடன் மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வீடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. புனேவில் நடத்தவேண்டிய காரணம் என்னவென்றால் அரசு மற்றும் தனியார் கூட்டு நிறுவனங்களை மதிப்பீடு செய்ய மத்திய அரசால் அமைக்கப்பட்ட கேல்கர் குழுவின் தலைவர் விஜய் கேல்கர் அங்கு தான் வசிக்கிறார். இந்த கூட்டத்தில் 7 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அவற்றில் சில.

1. 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நிதிப் பகிர்வீடு செய்யவேண்டுமென்று மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதை மறுதலிக்கும் வகையில் சமகால மக்கள் தொகையின்படி நிதிப்பகிர்வீடு என்று இந்த கூட்டத்தில் முடிவெடுத்துள்ளது தமிழகத்திற்கு மிகப்பெரும் பாதிப்பும், கேடும் ஏற்படும்.

2. பின்தங்கிய மாநிலங்களான பீகார், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்கள் பிற்பட்ட மாநிலங்களாகும். அந்த மாநிலங்களுக்கு நிதியை அதிகம் வழங்க வேண்டும் என்றும் விவாதிக்கப்பட்டது.
தமிழ்நாடு,ஆந்திரா,தெலுங்கனா,கர்நாடகம் போன்ற தென் மாநிலங்கள் முன்னேறிய மாநிலம் என்றும் கருத்துகள் வைக்கப்பட்டுள்ளதாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மாற்றாந்தாய் போக்கான முறையாகும்.

நிதிக் கமிசன் அரசியலமைப்புச் சட்டத்தில் சொல்லப்படாத ஒரு அமைப்பாகும். அரசியலமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்ட திட்டக்குழு கலைக்கப்பட்டு நிடி ஆயோக் என்று மாற்றப்பட்டுள்ளது. அந்த குழுவே சூப்பர் கேபினெட்டாக மாநில அரசின் முதல்வர்களையும் நடத்திய விதம் கடுமையான விமர்சனங்களுக்கு உட்பட்டது. அரசியலமைப்புச் சட்டத்தில் அதிகாரம் வழங்கப்பட்ட திட்டக்குழுவை எதிர்த்தே நாம் கடந்த காலத்தில் கடுமையான கண்டனங்களையும் விமர்சனங்களையும் வைத்தோம். அரசியலமைப்புச் சட்டத்தில் சொல்லப்படாத அதிகாரமற்ற நிடி ஆயோக்கிற்கு யார் இந்த அதிகாரத்தை வழங்கியது. இந்த தான்தோன்றித்தனமான போக்கு சமஷ்டி அமைப்பிற்கும், ஜனநாயகத்திற்கும் ஊறு விளைவிக்கும்.

#நிடி_ஆயோக் #திட்டக்குழு #Planning_commission #NITI_Aayog

– கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories