நிதிக்குழுவின் மூலம் தமிழகத்திற்கு வரும் அபாயம்

niti ayog modi - 2026
இந்திய அரசின் நிதிக் குழுவின் தலைவர் என்.கே.சிங் தலைமையில் நிதிக்குழுவின் அதிகாரப்பூர்வமற்ற கூட்டம் புனேவில் நடந்துள்ளது. அதில் பொருளாதார நிபுணர்களுடன் மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வீடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. புனேவில் நடத்தவேண்டிய காரணம் என்னவென்றால் அரசு மற்றும் தனியார் கூட்டு நிறுவனங்களை மதிப்பீடு செய்ய மத்திய அரசால் அமைக்கப்பட்ட கேல்கர் குழுவின் தலைவர் விஜய் கேல்கர் அங்கு தான் வசிக்கிறார். இந்த கூட்டத்தில் 7 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அவற்றில் சில.

1. 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நிதிப் பகிர்வீடு செய்யவேண்டுமென்று மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதை மறுதலிக்கும் வகையில் சமகால மக்கள் தொகையின்படி நிதிப்பகிர்வீடு என்று இந்த கூட்டத்தில் முடிவெடுத்துள்ளது தமிழகத்திற்கு மிகப்பெரும் பாதிப்பும், கேடும் ஏற்படும்.

2. பின்தங்கிய மாநிலங்களான பீகார், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்கள் பிற்பட்ட மாநிலங்களாகும். அந்த மாநிலங்களுக்கு நிதியை அதிகம் வழங்க வேண்டும் என்றும் விவாதிக்கப்பட்டது.
தமிழ்நாடு,ஆந்திரா,தெலுங்கனா,கர்நாடகம் போன்ற தென் மாநிலங்கள் முன்னேறிய மாநிலம் என்றும் கருத்துகள் வைக்கப்பட்டுள்ளதாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மாற்றாந்தாய் போக்கான முறையாகும்.

நிதிக் கமிசன் அரசியலமைப்புச் சட்டத்தில் சொல்லப்படாத ஒரு அமைப்பாகும். அரசியலமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்ட திட்டக்குழு கலைக்கப்பட்டு நிடி ஆயோக் என்று மாற்றப்பட்டுள்ளது. அந்த குழுவே சூப்பர் கேபினெட்டாக மாநில அரசின் முதல்வர்களையும் நடத்திய விதம் கடுமையான விமர்சனங்களுக்கு உட்பட்டது. அரசியலமைப்புச் சட்டத்தில் அதிகாரம் வழங்கப்பட்ட திட்டக்குழுவை எதிர்த்தே நாம் கடந்த காலத்தில் கடுமையான கண்டனங்களையும் விமர்சனங்களையும் வைத்தோம். அரசியலமைப்புச் சட்டத்தில் சொல்லப்படாத அதிகாரமற்ற நிடி ஆயோக்கிற்கு யார் இந்த அதிகாரத்தை வழங்கியது. இந்த தான்தோன்றித்தனமான போக்கு சமஷ்டி அமைப்பிற்கும், ஜனநாயகத்திற்கும் ஊறு விளைவிக்கும்.

#நிடி_ஆயோக் #திட்டக்குழு #Planning_commission #NITI_Aayog

– கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories