கோவையைப் பெருமைப் படுத்தும் இரு இலக்கிய அமைப்புகள்!

kamban ilango - 2026

கோவையில் அமைதியாக நடக்கும் அற்புதமான கம்பன் கழகம், இளங்கோவடிகள் இலக்கிய மன்றத்தின் தமிழ் பணிகளில் சில…

கோவை கம்பன் கழகமும், இளங்கோவடிகள் இலக்கிய மன்றமும் வருடாவருடம் சிறப்பாக இலக்கிய விழாக்களை எடுத்து கம்பன் மலர், சிலம்பு மலர் என்று அற்புதமான ஆய்வுக் கட்டுரைகளோடு வெளியிடப்படுகிறது.

கோவை கம்பன் கழகம் பழமை வாய்ந்தது. தமிழறிஞர் அ.ச.ஞானசம்மந்தன் தொகுத்த கம்பராமாயணம் மூலப்பாடல்களும், உரைகளும் எட்டுத் தொகுதிகளாக கம்பன் அறநிலை 20 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டது. கோவை லட்சுமி மில் ஆலை அதிபரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜி.கே. சுந்தரம் அவர்களின் சீரிய முயற்சியால் வெளியானது. பாப்பிநாயக்கன்பாளையம் மணி மேல் நிலைப் பள்ளியில் இதன் அலுவலகம் இயங்கி வருகிறது. கம்பன் அறநிலையின் கீழ் கம்பன் கழகம் கோவை மக்களுக்கு இலக்கியக் கூட்டங்களை நடத்தி வருகிறது.

இந்த அமைப்பில் திரு. எஸ். பதி, திரு. சி. சௌந்தர்ராஜ், வி.செல்வபதி, சுனிதா சாந்தாராம், ஆர்.ஆர். பாலசுந்தரம், க. முருகேசன், முரளி, நஞ்சுண்டன் ஆகியோர் இந்த அமைப்பை கட்டிக் காத்து வருகின்றனர்.

ALSO READ:  நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

சமீபத்தில் வெளியான கம்பன் 44வது ஆண்டின் சிறப்பு மலரை திரு. ஆ.நஞ்சுண்டன் பதிப்பித்துள்ளார். மறைந்த தமிழறிஞர்கள் பேராசிரியர் மு. இராகவையங்கார், போராசிரியர் மு. அருணாசலம், வெள்ளக்கால் வெ.ப. சுப்ரமண்ய முதலியார், கோவைக்கிழார் சி.எம். இராமச்சந்திர செட்டியார், ஏ.வி.சுப்பிரமணிய ஐயர் போன்றோர்களின் இராமாயணம் குறித்தான 1944, 1955, 1975, 1980களில் எழுதிய கட்டுரைகள் வெளியாகியுள்ளன. முழுவதும் படித்தேன். நல்ல ஆய்வு கட்டுரைகள். இராம காதையைப் பற்றி அற்புதமான ஆய்வுக் கட்டுரைகள்.

கோவையில் இயங்கும் இளங்கோவடிகள் இலக்கிய மையமும் பாப்பிநாயக்கன்பாளையத்தில் இருந்து செயல்படுகிறது. மேலே இதே நிர்வாகிகள் இதை நடத்தி வருகின்றனர். 29 ஆம் ஆண்டு சிலப்பதிகார விழா மலரும் சிலம்பைப் பற்றி அற்புதமான ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. திரு. மா.பொ.சி, டாக்டர். மு.வரதராசனார், திரு. பெ.சிதம்பரனாதன் போன்ற தமிழறிஞர்களின் கட்டுரைகள் சிலம்பைப் பற்றி இடம்பெற்றுள்ளது. இந்த மலரும் சிறப்பாக ஆய்வுக்கு பயன்படும் மலராகத் திகழ்கின்றது.

இளங்கோவடிகள் இலக்கிய மன்றம் சார்பில் டாக்டர். தமிழ் தாத்தா. உ.வே.சா பெயரில் விருதுகள் வழங்கப்படுகின்றன. திரு. சிலம்பொலி செல்லப்பன், தினமணி முன்னாள் ஆசிரியர் ஐராவதி மகாதேவன், பாரதி ஆய்வாளர். சீனி விஸ்வநாதன், ஏ.ஜெகந்நாதன், பேராசிரியர் ஸ்ரீசந்திரன், வாகீசகலாநிதி ச. கணபதிராமன், முனைவர். பெ.ஞானசுந்தரம், முனைவர் ச.வே.சுப்ரமணியன், பன்முக அறிஞர் முனைவர் திருமதி பிரேமா நந்தகுமார், மகாவித்வான் மயிலம் வே.சிவசுப்ரமணியன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ALSO READ:  அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

கோவையில் அமைதியாக, ஆர்ப்பாட்டமில்லாமல் அற்புதமான தமிழ் பணியை ஆற்றுகின்ற கம்பன் கழகத்தையும், இளங்கோவடிகள் இலக்கிய மன்றத்தையும் தமிழ் கூறும் நல்லுலகம் பாராட்ட வேண்டும். அதனுடைய இலக்கிய வெளியீடுகளை பெற்று படிக்கவும் வேண்டும்.

#கோவைகம்பன்கழகம் #இளங்கோவடிகள்_கழகம் #Kovai_Kamban_Kazhagam #Ilangovadigal_Kazhagam

–  கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories