காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 40): சாவர்க்கரின் தொடர் அரசியல்!

savarkar Godse - 2026

அரியணையில் அமர்ந்து கொண்டு விட்ட அடக்குமுறை, உண்மையை வெளிப் படையாக உபதேசிப்பதையும்,நடைமுறைப்படுத்துவதையும் தடை செய்யுமேயானால் அப்போதுதான் ரகசிய சமூகங்கள் உருவாகின்றன, அந்த அடக்குமுறையை எதிர்த்து போரிடுவதும் நியாயமாகி விடுகிறது.

இயற்கையான தேசிய மற்றும் அரசியல் பரிணாம வளர்ச்சியை தவறான சக்திகள் அடக்குமுறையால் ஒடுக்க நினைக்கும் போது ,புரட்சி வெடித்தே ஆக வேண்டும்

  • இதுதான் சாவர்க்கரின் கொள்கை.

வெள்ளையனுக்கு இந்த நாட்டை அடிமைப்படுத்தி, அடக்கி ஆள எந்த உரிமையும் இல்லை. ஆனால், பல நேரங்களில் அடக்குமுறையை கையாண்டுதான் இந்த நாட்டை ஆண்டு வந்தான்.

தேசிய உணர்வும், சுதந்திர உணர்வும் பொங்கியெழுந்த போது, அவனை விரட்டி அடிக்க சுதந்திர போராளிகள் தோன்றினார்கள். பங்கிம் சந்திர சட்டர்ஜியை ( வந்தே மாதரம் தேசிய கீதத்தை தந்தவர் ) சந்தித்து விட்டு வரும்படியாக சுவாமி விவேகானந்தரை பணிக்கிறார் அவருடைய குருவான ராமகிருஷ்ண பரமஹம்ஸர்.

பங்கிம் சந்திர சட்டர்ஜியை சந்தித்து விட்டு வந்த சுவாமி விவேகானந்தர், ஆயுதமேந்தி ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போரிடும் மனோநிலையில் இருந்ததாக சுவாமி அரவிந்தர் குறிப்பிடுகிறார்.

ALSO READ:  அதிர்ச்சி... அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

பின்னாளில் எந்த ஆன்மீகம் அரவிந்தரை ஆட்கொண்டதோ, அது சற்று முன்னரே விவேகானந்தரை ஆட்கொண்டு விட்டது அவ்வளவே ! இப்போது நம் கதைக்கு வருவோம்…

கோட்ஸே ரத்தினகிரியில் சந்தித்த சாவர்க்கர் எப்படி இருந்தார்…. 46 வயது, வழுக்கைத் தலை, மென்மையான பேச்சு பார்ப்பதற்கு ஒரு கோயில் புரோகிதரை போன்ற தோற்றம்….

சிறையிலிருந்து வெளியே வந்த ஐந்து ஆண்டுகளுக்குள்ளாக அவருடைய உடலும், மனமும் நன்றாகத் தேறி விட்டன. இப்போது அவர் ஹிந்துக்களிடையே சமூக மற்றும் மதரீதியான சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் பணியிலே ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அதிகம் அதிகம் படித்தார்.. நிறைய கட்டுரைகளை, நாடகங்களை, நாவல்களை எழுதினார். என்ன, அவர் எழுத்துக்களில் அரசியல் இல்லை என்பதை அச்சிடுபவர் உறுதி செய்ய வேண்டியிருந்தது.

ஆனால் சாவர்க்கருக்கே உரிய அந்த கொப்பளிக்கும் சக்திக்கு போதிய தீனி இல்லாமல் இருந்தது. அவருடைய இயற்கையான விருப்பப் பணியான அரசியலில் அவரால ஈடுபட முடியவில்லை எனும் ஆதங்கம் இருந்து கொண்டே இருந்தது.

ஆங்கிலேய அரசுதான் அதற்கு தடை விதித்து இருந்ததே… சாவர்க்கர் அரசியலில் நேரடையாக ஈடுபடுவதுதான் தடை செய்யப்பட்டிருந்ததே ஓழிய, தனிப்பட்ட ரீதியில் யாருடனும் அரசியல் பேசுவதை ஆங்கிலேய அரசால் தடை செய்ய இயலவில்லை.

ALSO READ:  ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

நாதுராம் மணிக்கணக்கில் அமர்ந்து, சாவர்க்கர் பேசுவதை கேட்டு புல்லரித்து போவார்… சாவர்க்கரின் மந்திர சக்திக்கு கட்டுப்பட்டவர் ஆனார்.

சில மாதங்கள் கழித்து, நாதுராமை தன்னுடைய செயலாளராக இருக்கும்படி சாவர்க்கர் கேட்டுக் கொண்டார்.

( தொடரும் )

– எழுத்து: யா.சு.கண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories