காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 40): சாவர்க்கரின் தொடர் அரசியல்!

savarkar Godse - 2026

அரியணையில் அமர்ந்து கொண்டு விட்ட அடக்குமுறை, உண்மையை வெளிப் படையாக உபதேசிப்பதையும்,நடைமுறைப்படுத்துவதையும் தடை செய்யுமேயானால் அப்போதுதான் ரகசிய சமூகங்கள் உருவாகின்றன, அந்த அடக்குமுறையை எதிர்த்து போரிடுவதும் நியாயமாகி விடுகிறது.

இயற்கையான தேசிய மற்றும் அரசியல் பரிணாம வளர்ச்சியை தவறான சக்திகள் அடக்குமுறையால் ஒடுக்க நினைக்கும் போது ,புரட்சி வெடித்தே ஆக வேண்டும்

  • இதுதான் சாவர்க்கரின் கொள்கை.

வெள்ளையனுக்கு இந்த நாட்டை அடிமைப்படுத்தி, அடக்கி ஆள எந்த உரிமையும் இல்லை. ஆனால், பல நேரங்களில் அடக்குமுறையை கையாண்டுதான் இந்த நாட்டை ஆண்டு வந்தான்.

தேசிய உணர்வும், சுதந்திர உணர்வும் பொங்கியெழுந்த போது, அவனை விரட்டி அடிக்க சுதந்திர போராளிகள் தோன்றினார்கள். பங்கிம் சந்திர சட்டர்ஜியை ( வந்தே மாதரம் தேசிய கீதத்தை தந்தவர் ) சந்தித்து விட்டு வரும்படியாக சுவாமி விவேகானந்தரை பணிக்கிறார் அவருடைய குருவான ராமகிருஷ்ண பரமஹம்ஸர்.

பங்கிம் சந்திர சட்டர்ஜியை சந்தித்து விட்டு வந்த சுவாமி விவேகானந்தர், ஆயுதமேந்தி ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போரிடும் மனோநிலையில் இருந்ததாக சுவாமி அரவிந்தர் குறிப்பிடுகிறார்.

ALSO READ:  ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

பின்னாளில் எந்த ஆன்மீகம் அரவிந்தரை ஆட்கொண்டதோ, அது சற்று முன்னரே விவேகானந்தரை ஆட்கொண்டு விட்டது அவ்வளவே ! இப்போது நம் கதைக்கு வருவோம்…

கோட்ஸே ரத்தினகிரியில் சந்தித்த சாவர்க்கர் எப்படி இருந்தார்…. 46 வயது, வழுக்கைத் தலை, மென்மையான பேச்சு பார்ப்பதற்கு ஒரு கோயில் புரோகிதரை போன்ற தோற்றம்….

சிறையிலிருந்து வெளியே வந்த ஐந்து ஆண்டுகளுக்குள்ளாக அவருடைய உடலும், மனமும் நன்றாகத் தேறி விட்டன. இப்போது அவர் ஹிந்துக்களிடையே சமூக மற்றும் மதரீதியான சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் பணியிலே ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அதிகம் அதிகம் படித்தார்.. நிறைய கட்டுரைகளை, நாடகங்களை, நாவல்களை எழுதினார். என்ன, அவர் எழுத்துக்களில் அரசியல் இல்லை என்பதை அச்சிடுபவர் உறுதி செய்ய வேண்டியிருந்தது.

ஆனால் சாவர்க்கருக்கே உரிய அந்த கொப்பளிக்கும் சக்திக்கு போதிய தீனி இல்லாமல் இருந்தது. அவருடைய இயற்கையான விருப்பப் பணியான அரசியலில் அவரால ஈடுபட முடியவில்லை எனும் ஆதங்கம் இருந்து கொண்டே இருந்தது.

ஆங்கிலேய அரசுதான் அதற்கு தடை விதித்து இருந்ததே… சாவர்க்கர் அரசியலில் நேரடையாக ஈடுபடுவதுதான் தடை செய்யப்பட்டிருந்ததே ஓழிய, தனிப்பட்ட ரீதியில் யாருடனும் அரசியல் பேசுவதை ஆங்கிலேய அரசால் தடை செய்ய இயலவில்லை.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

நாதுராம் மணிக்கணக்கில் அமர்ந்து, சாவர்க்கர் பேசுவதை கேட்டு புல்லரித்து போவார்… சாவர்க்கரின் மந்திர சக்திக்கு கட்டுப்பட்டவர் ஆனார்.

சில மாதங்கள் கழித்து, நாதுராமை தன்னுடைய செயலாளராக இருக்கும்படி சாவர்க்கர் கேட்டுக் கொண்டார்.

( தொடரும் )

– எழுத்து: யா.சு.கண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories