February 21, 2026, 8:00 AM
24.6 C
Chennai

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 57): ஜின்னா வலியுறுத்திய வன்முறை!

indo pak partition people - 2026

பல மாகாணங்களில் முஸ்லீம்கள் போலீஸ் படையில் மிக பெரிய அளவில்இருந்ததும் ஆகஸ்ட் 16ந் தேதிய ஆபத்திற்கு புதிய பரிமாணம் சேர்த்தது.

சிந்து,பஞ்சாபில் 70 சதவிகிதம்,உத்திரப்பிரதேசம்,வங்காளத்தில் 50 சதவிகிதம் என்று காவல்துறையில் முஸ்லீம்கள் காணப்பட்டனர்.

ஆகவே இந்த பகுதிகள் ஹிந்துக்களுக்கு பாதுகாப்பற்ற பகுதிகளாக விளங்கின.

‘ அனைத்து அரசியல் அமைப்பு நடைமுறைகளுக்கும் விடைகொடுத்து ‘ என்று ஜின்னா சொன்னது வன்முறையில் இறங்குவோம் என்று பொருள்படுமா

என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில்,வன்முறை,அகிம்சை என்ற விவாதத்தில் இறங்க விரும்பவில்லை என்று பட்டென பதிலளித்தார் ஜின்னா.

உள்துறை பொறுப்பையும் சேர்த்து வகித்த வங்காள முதல்வர் சுஹ்ரவர்த்தி ,கல்கத்தா படுகொலைக்கு களம் அமைத்து கொடுத்ததுடன்,தானே தலைமை தாங்கவும் செய்தார்.

கல்கத்தாவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும் முஸ்லீம் குண்டர்களைத் திரட்டி,துப்பாக்கி முதலிய கொடிய ஆயுதங்கள் கொடுத்து அழைத்து வந்தார்கள்.

கடும் பெட்ரோல் தட்டுப்பாடு நிலவிய போதிலும்,அவர்களுக்கு பெட்ரோலுக்கான ரேஷன் கூப்பன்கள் தட்டுப்பாடின்றிக் கிடைத்தன.

ஹெளராவில் குண்டர் கூட்டங்களை கல்கத்தா மேயர் ஷரீப் கானே முன்னின்று வழி நடத்தினார்.

மொத்தமிருந்த 24 தலைமைப் போலீஸ் நிலையங்களில் 22 ஹிந்து அதிகாரிகளின் தலைமையில் இருந்தன.

அனைத்திலும் முஸ்லீம் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டனர்.மீதமிருந்த 2 அலுவலகங்களும் ஆங்கிலோ இந்திய அதிகாரிகளின் கீழ் இயங்கின.

ஆகஸ்ட் 16 அன்று பொழுது புலர்ந்தது !
’ போராடி வெல்வோம் ஹிந்துஸ்தானத்தை ‘ ( லட் கே லேங்கே ஹிந்துஸ்தான் ) என்ற வெறிக் கூச்சலுடன் லீக் கும்பல் புறப்பட்டது.

முதல்வரின் தலைமையில் நடந்த கூட்டத்தில் எல்லாப் பேச்சாளர்களும் ‘ ஹிந்துக்களை ஒழிப்போம் கொல்வோம் ‘ என்று சபதம் எடுத்துக் கொண்டனர்.

காஃபிர்கள் ( ஹிந்துக்கள்) மீது ஜிஹாத் ( புனிதப் போர் ) அறிவிக்கப்பட்டது.

( தொடரும் )

#காந்திகொலையும்பின்னணியும்

  • எழுத்து: யா.சு.கண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories