காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 96) : அப்ரூவரான ஆட்டோ டிரைவர்!

godse apte - 2026

நண்பகல் நேரம்… ஆப்தேயும் நாதுராமும் டாடா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அலுவல கத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. அங்கிருந்து அந்த நிறுவனத்தின் வண்டியேறி, விமான நிலையம் சென்று விமானத்தில் டெல்லிக்கு பயணிக்க வேண்டும்.

அவர்கள் அது வரை 2000 ரூபாய் நிதி திரட்டியிருந்தார்கள்.இன்னும் இரண்டு பேரை பார்க்க வேண்டியிருந்தது. பணம் கொடுக்க ஒப்புக் கொண்டவர்கள் சற்று தாமதித்து வரச் சொல்லியிருந்தார்கள். அவர்களில் ஒருவர்.குர்லா புறநகர் பகுதியில் வசித்து வந்தவர். 400 ரூபாய் கொடுப்பதாகச் சொல்லியிருந்தார்.

இன்னொருவர் ஒரு மில் உரிமையாளர்.என்ன தொகை என்று குறிப்பிடாவிட்டாலும், ஒரு பெரிய தொகையை கொடுப்பார் என்று ஆப்தேயும், நாதுராமும் எதிர்பார்த் திருந்தார்கள். திகம்பர் பாட்கேவிற்கு 350 ரூபாய் செலவிற்கு கொடுத்த ஆப்தேயும், நாதுராமும், குர்லா நபரிடம் பிற்பகல் சென்று,அவர் கொடுப்பதாகச் சொன்ன 400 ரூபாயை வசூல் செய்யும்படி பாட்கேயிடம் சொன்னார்கள்.

நாதுராமும், ஆப்தேயும் மில் உரிமையாளரிடம் அவர்களே சென்றார்கள்.அவர் 1000 ரூபாய் கொடுத்தார்.  ஆனால் அந்த பணத்தை பெறுவதற்காகச் சென்றதால்,ஒரு மணி நேரம் கால தாமதமாகி விட்டது. ஆகவே டாக்ஸி டிரைவரை நேராக, 15 மைல் தொலைவிலிருந்த SANTA CRUZ விமான நிலையத்திற்கு செல்லச் சொன்னார்கள். விமானம் 2 மணிக்கு புறப்பட வேண்டியிருந்தது.

ALSO READ:  தகுந்த வைத்தியம் தேவை!

வழிநெடுக,ஆப்தேயும்,நாதுராமும் பாட்கேயிற்கு உணர்ச்சியூட்டும் விதத்தில் பேசினார்கள். அன்று மாலை தவறாது பம்பாயிலிருந்து டெல்லிக்கு புறப்படும் FRONTIER MAIL ரெயிலில் டெல்லி வந்தடையும்படி கூறினார்கள்.

அடுத்த நாள் மாலை ரயில் டெல்லி வந்தடையும் போது,அவரை டெல்லி ரயில் நிலையத்தில் சந்திப்பதாகக் கூறினார்கள். ஒரு வேளை ஏதாவது காரணத்தால்,ரயில் நிலையத்தில் சந்திக்க முடியாமல் போனால்,பாட்கேயை நேரே டெல்லி ஹிந்து மகா சபா அலுவலகத்திற்குச் செல்லும்படியும்,அவர்கள் இருவரில் ஒருவர் அவருக்காக அங்கு நிச்சயம் காத்திருப்பதாகவும் சொன்னார்கள்.

அவர்களுடைய டாக்ஸி SANTA CRUZ விமான நிலையத்தை அடைந்த போது, அவர்களுடைய விமானம்,அங்கிருந்து ஒரு மைல் தள்ளியிருந்த கலினா விமான நிலையத்திலிருந்து புறப்படுவதாக அறிந்தார்கள். ஆப்தேயிற்கு விமானத்தை தவற விட்டுவிடுவோமோ எனும் கவலை தொற்றிக் கொண்டது.

டாக்ஸி டிரைவரை காற்றின் வேகத்தில் ஓட்டும்படி விரட்டிக் கொண்டே பயணித்தார்கள். கலினா விமான நிலையத்தை அடைந்தவுடன்,டாக்ஸி டிரைவருக்கு பணத்தை கொடுக்கும்படி பாட்கேயிடம் கத்திக் கொண்டே விமானத்தில் ஏற ஓடினார்கள்.

அவர்கள் அனைவரையும் டாக்ஸி டிரைவர் நினைவு வைத்திருக்க இந்த களேபரமெல்லாம் போதாதென்று, பாட்கே அதே வண்டியில் குர்லா சென்று,400 ரூபாய் பணத்தை வசூல் செய்துக் கொண்டு,தானும்,சங்கர் கிஷ்டய்யாவும் குர்லா ரயில் நிலையத்திற்குச் செல்லும் வரை அதே டாக்ஸியை பயன்படுத்தினார்.

ALSO READ:  ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

அப்போது மணி மாலை 3 மணியை கடந்து விட்டது. டாக்ஸியை காலை 7 மணிக்கு எடுத்திருந்தார்கள். டாக்ஸி மீட்டர் 55 ரூபாய் 10 அணா காட்டியது. அந்த டாக்ஸி டிரைவரின் அன்றாட வருமானம் சராசரியாக 30 ரூபாய்தான். திகம்பர் பாட்கே இன்னும் அந்த சாது வேஷத்திலேயே இருந்தார்.

டாக்ஸி டிரைவருக்கு பணத்தை கொடுத்து விட்டு அவரிடம் பணத்தை பெற்றுக் கொண்டதற்கு ரசீது கேட்டார் அவர். டாக்ஸி பயணத்திற்கு ரசீது கேட்கிறாரே என்று ஆச்சரியத்துடன் பார்த்தப்படி டிரைவரும் ரசீது கொடுத்தார்.

அந்த டாக்ஸி டிரைவரின் பெயர் AITAPPA KOTIAN. பின்னாளில் காந்தி கொலை வழக்கில்,அரசு தரப்பின் முக்கிய சாட்சி ஆனார்.

(தொடரும்)

#காந்திகொலையும்பின்னணியும்

– எழுத்து: யா.சு.கண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories