ஆலய மீட்பு இயக்கம்! ஹெச்.ராஜாவுக்குக் கிடைத்த முதல் வெற்றி!

29 July19 Chenni highcourt - 2026

இந்து ஆயலங்கள் மீட்பு இயக்கம் என மிக முக்கியமான ஒரு இயக்கத்தை நடத்தி வருகிறார் தமிழகத்தைச் சேர்ந்த பாஜக., தேசிய செயலர் H ராஜா! அவர் இந்த இயக்கத்தின் மூலம் கோவில் சொத்துகள் கொள்ள போகாமல் காத்து, குத்தகை நிலங்களை மீட்க போராடி வருகிறார்.

அண்மையில் கோவில் நிலங்களை மீட்கவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுக்கப் பட்டிருந்தது. அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ் கே கவுல் மற்றும் நீதிபதி சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வு, நமது பாரம்பரியத்தைப் பறை சாற்றும் கோவில் சிலைகளை திருடுவது வருத்தமளிக்கிறது! மன்னர்களும், ஜமீன்தார்களும் கோவில்களுக்காக கொடுத்த நிலங்களை பலர் ஏமாற்றி கபளீகரம் செய்வது வருத்தமளிக்கிறது என்றனர்.

மேலும் பல கோவில்களில் உண்டியல்கள் உடைக்கப்படுகின்றன, நகைகள் திருடப்படுகின்றன, விலைமதிக்க முடியாத புராதனப் பொருட்கள் கடத்தப்படுகின்றன… இது தான் கோவில்களை பராமரிக்கும் லட்சணமா என்று அறநிலையத் துறையை கண்டித்தனர்.

தொடர்ந்து இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் கோவில் நிலங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கவேண்டும் என்றும் அதன் மூலம்ல் இந்த வழக்குகளை விரைவில் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும், கோவில் நிலங்களை மீட்கவும், கடைகளுக்கு சரியான வாடகை நிர்ணயித்து அவற்றை சரியாக வசூல் செய்யவும் ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் கூறினர்.

தமிழகத்தில் மட்டும் கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் 5 லட்சம் ஏக்கருக்கும் மேல் உள்ளன.  அவற்றை மீட்டு கோவில்களுக்கு ஒப்படைப்பதுடன், இனி கோவில்களில் இருந்து வரும் வருமானத்தை கோவில்களுக்காக மட்டுமே செலவு செய்ய வேண்டும், வருவாய் குறைவாக உள்ள கோவில்களுக்கு வருவாய் அதிகமாக உள்ள கோவில்களின் வருமானத்தை எடுத்து அனைத்துக் கோவில்களையும் சரியாக பராமரிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு ஹெச்.ராஜாவின் முயற்சிக்குக் கிடைத்த முதல் வெற்றியாகவே பார்க்கப் படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories