February 21, 2026, 3:24 PM
30.4 C
Chennai

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி யார்?

godse gandhi - 2026

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கமல் கூறியுள்ளார். அவரின் கூற்று படி சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்றால் காந்தியும் இந்து தான்! கோட்சேவும் இந்து தான். அதனால் இவர்களில் கமல் யாரை இந்து என்கிற அடிப்படையில் தீவிரவாதி என்று கூறுகிறார் என்று பார்ப்போம்..

இப்பொழுது பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத நாடு என்று உலகம் ஒப்புக்கொண்டுள்ளது. இதில் பாகிஸ்தான் அரசோ அங்குள்ள அரசியல் தலைவர்கள் இந்தியாவிலோ இல்லை வெளிநாடுகளிலோ தீவிரவாதத்தை தூண்டி விடவில்லை.மாறாக இந்தியாவுக்கு எதிராக செயல்படுகின்ற தீவிரவாதிகளுக்கு தீவிரவாதம் வளர பண உதவி செய்கிறார்கள் அவ்வளவே..!

இருந்தாலும் நாமும் பாகிஸ்தானை தீவிரவாத நாடு என்கிறோம். காந்தி கூட பாகிஸ்தானுக்கு இந்தியா 55 கோடி ரூபாயை உடனடியாக அளிக்க வேண்டும் என்று 1948 ம்ஆண்டு ஜனவரி மாதம் 10ம் தேதி உண்ணாவிரதம் டெல்லி பிர்லா ஹவு சில் உண்ணாவிரதம் இருந்தார்.அது தான் காந்தியின் கடைசி உண்ணாவிரதம்.

சரி காந்தி ஏன் உண்ணாவிரதம் இருந்தார் என்று பார்ப்போம். இந்திய பாகிஸ்தான் பிரிவினை யின் பொழுது இந்தியா பாகிஸ்தானுக்கு அளிக்க வேண்டிய 75 கோடி ரூபாயில் முதல் தவணையாக 20 கோடி ரூபாயை பிரிவினையின் பொழுதே அளித்து விட்டோம்.மீதி ரூபாயை சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது தருகிறோம் என்றே இந்திய
அரசு பாகிஸ்தானிடம் கூறி இருந்தது.

இதற்கு பிறகு 1947 ல் அக்டோபரில் காஷ்மீர் இந்தி யாவோடு இணைந்ததால் பாகிஸ்தான் இந்தியாவோடு போருக்கு வந்தது. இந்தியாவுக்கு ம் பாகிஸ்தானுக்கும் காஸ்மீர் பிரச்சனையால் உருவான முதல் போர் 1948 அக்டோபர் 22 ல் ஆரம்பித்து 1949 ஜனவரியில் தான் முடிந்தது.

இந்தியாவில் இருந்து பிரிந்த ஒரு நாடு பிரிந்து இரண்டு மாதமே ஆன நிலையில் இந்தியாவை எதிர்த்து சுமார் ஒரு வருட காலத்திற்கும் அதிகமாக போரிட முடிந்தது என்றால் அது யாரால் எதனால் என்று யோசித்து பார்க்க வேண்டும்.

இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்றுக் கொண்டு இருந்த பொழுதே பாகிஸ்தான் 55 கோடியை அளிக்க வேண்டும் என்று மவுண்ட் பேட்டன் பிரபு மூலமாக நிர்பந்திக்க ஆரம்பித்தது. ஆனால் வல்லபாய்பட்டேல் நாங்கள் இப்பொழுது 55 கோடியை பாகிஸ்தானுக்கு அளித்தால் அவர்கள் அதை வைத்தே பணம் வாங்கி இந்தியாவை தாக்குவார்கள் அதனால் பணத்தை அளிக்க முடியாது என்று பட்டேல் மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் உறுதியாகக் கூறிவிட்டார்.

இந்த நிலையில் ஜின்னா காந்தியிடம் முறையிட காந்தியும் பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாயை அளிக்கும் வேண்டும் என்று இந்திய அரசை மிரட்டி உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தார். சூப்பர்ல..

இந்தியாவின் தந்தை என்று அழைக்கப்படும் காந்தி இந்தியாவை எதிர்த்து போர் புரிந்து கொண்டு இருக்கும் பாகிஸ்தானுக்கு பணத்தை அளிக்கும் படி மிரட்டி உண்ணாவிரதம்
இருந்ததை தேசப்பற்று என்று கூறுபவர்கள் நிச்சயமாக கோமாளியாகத்தான் இருக்க முடியும்.

காந்தியின் உண்ணாவிரதத்திற்கு பயந்து கடைசியில் இந்திய அரசு பாகிஸ்தானுக்கு 55 கோடியை அள்ளிக்கொடுத்தது .அந்த பணத்தை வைத்துக் கொண்டு தான் பாகிஸ்தான் இந்தியாவிற்கு ஒரு வருடமாக பலத்த அடி கொடுத்தது. 10 நாட்களில் பாகிஸ்தான் இருந்த இடமே தெரியாமல் அழித்து விட ஆற்றல் கொண்ட இந்திய ராணுவத்தை பாகிஸ்தான் படைகளிடம் அடி வாங்க வைத்தது, இந்தியா அப்பொழுது பாகிஸ்தானுக்கு அளித்த 55 கோடி ரூபாய் தான்.

அந்த 55 கோடி ரூபாயை பாகிஸ்தானுக்கு அளிக்கும் படி இந்திய அரசை மிரட்டி உண்ணாவிரதம் இருந்தவர் காந்தி. இதனால் தான் கோட்சே காந்தியை சுட்டுக் கொன்றார். இந்த இடத்தில் எது தீவிரவாதம் என்று யோசிக்க வேண்டும். எதிரி நாட்டுக்கு பணம் அளித்து அவர்கள் மூலமாக 2000 க்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் ராணுவத்தினால் கொல்லப்பட காரணமாக இருந்த காந்தியின்
உண்ணாவிரத மிரட்டல் கூட ஒரு தீவிரவாதத்தின் வெளிப்பாடே.!!

– யாரோ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories