மகளிருக்கு அதிகாரம் அளித்தல்! அதுவே நவராத்திரி!

ila ganesan - 2026

மகளிருக்கு அதிகாரம் அளித்தல் என்பதன் அவசியத்தை வலியுறுத்துவது நவராத்திரி என்று தனது கருத்தை வெளியிட்டிருக்கிறார் பாஜக., மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன்.

இது குறித்து அவர் தெரிவித்துள்ள கருத்தில்…

La Ganesan: “மகளிருக்கு அதிகாரம் அளித்தல்” அதாவது “மஹிளா சக்தி கரன்” குறித்து மாநிலங்கள் அவையில் ஒருமுறை விவாதம் நடந்தது. அந்தத் திட்டத்தை வரவேற்றுப் பேசுகையில் “சக்தியே அவர்கள் தானே! சக்திக்கே சக்தி அளிப்பதான திட்டம்!” என்று நான் பேசினேன்.

பெண்டிரைப் போற்றுதல் பாரதப் பண்பாடு. மகளிரை நாம் சக்தி ஸ்வரூபமாகவே காண்கிறோம், வழிபடுகிறோம். அதன் ஒரு வெளிப்பாடு தான் நவராத்திரி பூஜை. சக்தியை நமது வீடுகளில் ஆவாஹனம் செய்து ஒவ்வொரு நாளும் வெவ்வேறு ரூபங்களில் வழிபட்டுப் பெண் சக்தியைக் கொண்டாடுகிறோம்.

இன்று ஒன்பதாம் நாள். அறியாமை எனும் இருள் அகற்றிட, அஞ்ஞானம் போக்கிட, விஞ்ஞானமும் மெய்ஞானமும் அறிவில் சுடர்விட, அருள்தரும் அன்னையை வணங்கிடும் “சரஸ்வதி பூஜை” இன்று.

ALSO READ:  இந்திய மண்ணில் சிக்கிய சிஐஏ ஏஜெண்ட்! மணிப்பூர், மிசோரம்... என்ன நடக்குது இங்கே!

அதோடு கூடவே “ஆயுத பூஜை”. அதர்மம் அழித்திட அவதாரம் எடுத்த சக்தி அவள் தனது ஆயுதங்களைப் பூஜித்த நாள். அந்த ஆயுதங்களைக் கொண்டு அதர்மத்தை வெற்றி கொண்ட நாள், நாளை வரும் “விஜய தசமி”. அத்துடன் நவராத்திரி நிறைவு பெறும்.

வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கும் வாக்தேவி, வீணாவாணி, கலைமகளின் பொற்றாமரைப் பாதம் பணிவோம்! சமுதாய, தேச முன்னேற்றத்துக்காக அறிவென்னும் ஆயுதத்தை பிரயோகிப்போம்.

அனைவருக்கும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, நவராத்திரி நல்வாழ்த்துக்கள்! ????️

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories