December 5, 2025, 5:19 PM
27.9 C
Chennai

ஜூலை 17: இன்று உலக எமோஜி தினம்!

july17 world emoji day - 2025

மனதின் எண்ணங்களை வெளியிட பொம்மை வடிவத்தில் எமோஜி மொழிகள் பிறந்தன. தினமும் சாட்டிங்கில் உபயோகிக்கும் எமோஜிகளின் தனித்துவம் என்ன? இவை எப்போது எங்கு பிறந்தன? உலகத்தில் அதிகமாக பயன்படுத்தப்படும் எமோஜி என்ன?

சோசியல் மீடியாவை அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு எமோஜி பற்றி தனியாக அறிமுகம் செய்ய வேண்டிய தேவையில்லை. சொற்களில் வெளிப்படுத்த இயலாத எண்ணங்களை இந்த எமோஜிகள் நாசூக்காக கூறிவிடும். முக்கியமாக வாட்ஸப்பில் சாட்டிங் செய்யும்போது பலரும் இவற்றையே அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

எமோஜியின் வரலாறு என்ன? ஜிமெயில், வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவை பழக்கத்திற்கு வரும் முன்பு அதிகம் பேர் யாஹு மெயில், யாஹு மெசெஞ்சர்களை பயன்படுத்தினோம். சாட்டிங் செய்யும் போது எதிரில் இருப்பவர் தென்படமாட்டார். ஆதலால் அவருடைய எண்ணங்களை அறிவதற்குத் தோதாக யாஹூ இந்த எமோஜிகளைப் பயன்பாட்டிற்கு எடுத்து வந்தது. 2010 க்கு பிறகு இந்த எமோஜிகள் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம்ஸில் கூட வந்து சேர்ந்தன. ஆனால் எமோஜியைஅறிமுகப்படுத்திய பெருமை யாஹுவுடையது அல்ல. ஜப்பான் மொபைல் ஆபரேட்டிங் அமைப்பு என்டிடி டொகாமோ வில் பணிபுரிந்த ஷிகடகா குரிடா என்ற பொறியியல் வல்லுநர் இவற்றை வடிவமைத்தார்.

எமோஜிகளை யார் வேண்டுமானாலும் வெளியிட முடியாது. யூனிகோடு கன்சார்டியத்தின் ஒப்புதல் கிடைத்தபின்னரே ஒவ்வொரு ஆண்டும் இதனை வெளியிடுவார்கள். இவை ஒரு முறை மார்க்கெட்டில் வெளிவந்த உடனே ஆண்ட்ராய்டு ஐஓஎஸ் போன்ற மொபைல் ஆபரேட்டிங் சிஸ்டம்கள் தம் மொபைல்களில் இவற்றை பயன்படுத்தத் தொடங்கும். இந்த யூனிகோடு கன்சார்டியத்தில் நெட்பிளிக்ஸ், ஃபேஸ்புக், கூகுள், டிண்டர், ட்விட்டர் மற்றும் பல அமைப்புகளின் பிரதிநிதிகள் அங்கத்தினர்களாக உள்ளனர்.

வாட்ஸப்பில் கை அல்லது மனித முகத்தை பயன்படுத்துவதற்கு முன்பு அதில் ஸ்கின்டோன் (உடலின் நிறம்) காட்டப்படும் விஷயம் அனைவருக்கும் தெரிந்ததே. அதில் எந்த உடல் நிறத்தில் உள்ளவர்கள் அந்த உடல் நிறத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இவற்றை ஜெண்டர் நியூட்ரல் எமோஜிஸ் என்று அழைப்பார்கள்.

அதிகமாக உபயோகிக்கும் எமோஜிகள் இவையே…
லைக் எனப்படும் தம்ஸப், டியர்ஸ் ஆஃப் ஜாய் (ஆனந்த கண்ணீர்) , பறக்கும் முத்தம் போன்ற எமோஜிகள் அதிகமாக பயன்பாட்டில் உள்ளதாக கணக்கிடபட்டுள்ளது.

ஜூலை 17 உலக ஏமோஜி தினத்தை நடத்த வேண்டும் என்ற யோசனை எமோஜிபீடியா அமைப்பாளர் ஜெரேமிபுர்ஜ் என்பவருக்குத் தோன்றியது. யூனிகோடு எமோஜி சப் கமிட்டியில் வைஸ் சேர்மனாக உள்ள இவர் எமோஜி தொடர்பான சிபார்சுகளை செய்தார். அவ்வாறு பயன்பட்டுக்கு வந்தவையே இன்றைய இந்த பொம்மை மொழிகள்.

இன்று மொபைலை கையில் வைத்துக்கொண்டு எமோஜி இல்லாமல் நாம் இல்லை என்ற நிலையில் வாழ்ந்து வருகிறோம் என்றால் அது மிகையில்லை. மகிழ்ச்சி, துயரம், கோபம் ஆத்திரம் கண்ணீர், பெருமை, வாழ்த்து, ஆசி, உடல்நிலை, மழை, வெயில் என்று எல்லாவற்றிற்கும் ஒரு எமோஜியை பிடித்துப் போட்டு நண்பர்களுக்கு பகிர்ந்து வருகிறோம்.

இன்று இந்த குட்டிக் குட்டி பொம்மைகளுக்கு அடிமையாகாதவரே இல்லை எனலாம்.

– ராஜி ரகுநாதன், ஹைதராபாத்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories