ஜூலை 17: இன்று உலக எமோஜி தினம்!

july17 world emoji day - 2026

மனதின் எண்ணங்களை வெளியிட பொம்மை வடிவத்தில் எமோஜி மொழிகள் பிறந்தன. தினமும் சாட்டிங்கில் உபயோகிக்கும் எமோஜிகளின் தனித்துவம் என்ன? இவை எப்போது எங்கு பிறந்தன? உலகத்தில் அதிகமாக பயன்படுத்தப்படும் எமோஜி என்ன?

சோசியல் மீடியாவை அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு எமோஜி பற்றி தனியாக அறிமுகம் செய்ய வேண்டிய தேவையில்லை. சொற்களில் வெளிப்படுத்த இயலாத எண்ணங்களை இந்த எமோஜிகள் நாசூக்காக கூறிவிடும். முக்கியமாக வாட்ஸப்பில் சாட்டிங் செய்யும்போது பலரும் இவற்றையே அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

எமோஜியின் வரலாறு என்ன? ஜிமெயில், வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவை பழக்கத்திற்கு வரும் முன்பு அதிகம் பேர் யாஹு மெயில், யாஹு மெசெஞ்சர்களை பயன்படுத்தினோம். சாட்டிங் செய்யும் போது எதிரில் இருப்பவர் தென்படமாட்டார். ஆதலால் அவருடைய எண்ணங்களை அறிவதற்குத் தோதாக யாஹூ இந்த எமோஜிகளைப் பயன்பாட்டிற்கு எடுத்து வந்தது. 2010 க்கு பிறகு இந்த எமோஜிகள் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம்ஸில் கூட வந்து சேர்ந்தன. ஆனால் எமோஜியைஅறிமுகப்படுத்திய பெருமை யாஹுவுடையது அல்ல. ஜப்பான் மொபைல் ஆபரேட்டிங் அமைப்பு என்டிடி டொகாமோ வில் பணிபுரிந்த ஷிகடகா குரிடா என்ற பொறியியல் வல்லுநர் இவற்றை வடிவமைத்தார்.

ALSO READ:  அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

எமோஜிகளை யார் வேண்டுமானாலும் வெளியிட முடியாது. யூனிகோடு கன்சார்டியத்தின் ஒப்புதல் கிடைத்தபின்னரே ஒவ்வொரு ஆண்டும் இதனை வெளியிடுவார்கள். இவை ஒரு முறை மார்க்கெட்டில் வெளிவந்த உடனே ஆண்ட்ராய்டு ஐஓஎஸ் போன்ற மொபைல் ஆபரேட்டிங் சிஸ்டம்கள் தம் மொபைல்களில் இவற்றை பயன்படுத்தத் தொடங்கும். இந்த யூனிகோடு கன்சார்டியத்தில் நெட்பிளிக்ஸ், ஃபேஸ்புக், கூகுள், டிண்டர், ட்விட்டர் மற்றும் பல அமைப்புகளின் பிரதிநிதிகள் அங்கத்தினர்களாக உள்ளனர்.

வாட்ஸப்பில் கை அல்லது மனித முகத்தை பயன்படுத்துவதற்கு முன்பு அதில் ஸ்கின்டோன் (உடலின் நிறம்) காட்டப்படும் விஷயம் அனைவருக்கும் தெரிந்ததே. அதில் எந்த உடல் நிறத்தில் உள்ளவர்கள் அந்த உடல் நிறத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இவற்றை ஜெண்டர் நியூட்ரல் எமோஜிஸ் என்று அழைப்பார்கள்.

அதிகமாக உபயோகிக்கும் எமோஜிகள் இவையே…
லைக் எனப்படும் தம்ஸப், டியர்ஸ் ஆஃப் ஜாய் (ஆனந்த கண்ணீர்) , பறக்கும் முத்தம் போன்ற எமோஜிகள் அதிகமாக பயன்பாட்டில் உள்ளதாக கணக்கிடபட்டுள்ளது.

ஜூலை 17 உலக ஏமோஜி தினத்தை நடத்த வேண்டும் என்ற யோசனை எமோஜிபீடியா அமைப்பாளர் ஜெரேமிபுர்ஜ் என்பவருக்குத் தோன்றியது. யூனிகோடு எமோஜி சப் கமிட்டியில் வைஸ் சேர்மனாக உள்ள இவர் எமோஜி தொடர்பான சிபார்சுகளை செய்தார். அவ்வாறு பயன்பட்டுக்கு வந்தவையே இன்றைய இந்த பொம்மை மொழிகள்.

ALSO READ:  மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இன்று மொபைலை கையில் வைத்துக்கொண்டு எமோஜி இல்லாமல் நாம் இல்லை என்ற நிலையில் வாழ்ந்து வருகிறோம் என்றால் அது மிகையில்லை. மகிழ்ச்சி, துயரம், கோபம் ஆத்திரம் கண்ணீர், பெருமை, வாழ்த்து, ஆசி, உடல்நிலை, மழை, வெயில் என்று எல்லாவற்றிற்கும் ஒரு எமோஜியை பிடித்துப் போட்டு நண்பர்களுக்கு பகிர்ந்து வருகிறோம்.

இன்று இந்த குட்டிக் குட்டி பொம்மைகளுக்கு அடிமையாகாதவரே இல்லை எனலாம்.

– ராஜி ரகுநாதன், ஹைதராபாத்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories