நெகிழ வைத்த ஆசிரியர்; உருகும் ஐபிஎஸ் அதிகாரி!

Published:

bhagavan teacher - 2026

திருவள்ளூர் வெளியகரம் அரசுப் பள்ளி ஆசிரியர் பகவான் பணி மாற்றலாகி வேறு ஊருக்குச் செல்ல எதிர்ப்பு தெரிவித்து, பள்ளியில் அவரது வகுப்பில் படித்த மாணவர்கள் அழுது புரண்டு எங்களை விட்டுச் சென்றுவிடாதீர்கள் என்று கூறிய தகவலும் புகைப்படங்களும் ஊடகங்களில் வெளியாயின. .இது தமிழகத்தில் பலரது கவனத்தையும் கவர்ந்தது. அரசுப் பள்ளி ஆசிரியரின் பாசமான நடவடிக்கைகளை மாணவர்கள் விரும்புகின்றனர் என்பதை எடுத்துக் காட்டிய இந்தச் செய்தியைப் பார்த்துவிட்டு, பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் ஐபிஎஸ் அதிகாரி ஷைலேந்திர பாபு தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பாராட்டுக் கருத்து இது…

திருவள்ளூர், வெளியகரம் அரசு பள்ளி ஆசிரியர் பகவான் அவர்களுக்கு பாராட்டுக்கள். நண்பராக,வழிகாட்டியாக, தத்துவ ஞானியாக ஒரு ஆசிரியர். மாணவர்கள், சென்று விடாதீர்கள் என்று மன்னாடியது என்னை நெகிழ வைத்தது.

ALSO READ:  ஆவணி அவிட்டம்; விஸ்வகர்ம சமுதாயத்தினர் பூணூல் மாற்றி வழிபாடு!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img