வேலையின்றி இருந்தால் பி.எஃப். பணத்தை உடனே எடுக்கலாம்! விதியில் திருத்தம்!

Published:

epfo - 2026

புது தில்லி : ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி- ஈபிஎஃப்ஓ.,வை வேலையின்றி இருந்தால் உடனே எடுத்துக் கொள்ளலாம். தற்போதைய விதிகளின்படி ஊழியர் ஒருவர் 2 மாதங்கள் வேலையின்றி இருந்தால் மட்டுமே அவர்களின் பிஎஃப் பணத்தை பெற முடியும். இந்த விதியில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒருவர் வேலையில் இருந்து வெளியேறி, வேலையின்றி இருக்கும் போது, பிஎஃப் பணத்தைப் பெறுபவது எளிமையாக்கப்பட்டுள்ளது.

ஒருவர் ஒரு மாதம் வேலையில்லாமல் இருந்தாலே மொத்த பிஎஃப் தொகையில் 75 சதவீதத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். மீதமுள்ள 25 சதவீத தொகையை வழக்கமான விதியின்படி, அடுத்த 2 மாதங்கள் வேலையில்லாமல் இருந்தால் பெற முடியும். ஒருவேளை 75 சதவீதம் பிஎஃப் பணத்தை பெற்ற பிறகு ஒருவருக்கு வேலை கிடைத்து விட்டால், வேறு வேலைக்குச் சென்ற பிறகு அந்த பிஎஃப் கணக்கை தொடரவும் வழி செய்யப்பட்டுள்ளது.

தில்லியில் நேற்று நடைபெற்ற இபிஎஃப் இந்தியா கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் தலைமையிலான கூட்டத்திற்குப் பிறகு ஈபிஎஃப் அமைப்பின் டிவிட்டர் தகவலில் இது தெரிவிக்கப் பட்டுள்ளது.

 

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img