புது தில்லி : ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி- ஈபிஎஃப்ஓ.,வை வேலையின்றி இருந்தால் உடனே எடுத்துக் கொள்ளலாம். தற்போதைய விதிகளின்படி ஊழியர் ஒருவர் 2 மாதங்கள் வேலையின்றி இருந்தால் மட்டுமே அவர்களின் பிஎஃப் பணத்தை பெற முடியும். இந்த விதியில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒருவர் வேலையில் இருந்து வெளியேறி, வேலையின்றி இருக்கும் போது, பிஎஃப் பணத்தைப் பெறுபவது எளிமையாக்கப்பட்டுள்ளது.
ஒருவர் ஒரு மாதம் வேலையில்லாமல் இருந்தாலே மொத்த பிஎஃப் தொகையில் 75 சதவீதத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். மீதமுள்ள 25 சதவீத தொகையை வழக்கமான விதியின்படி, அடுத்த 2 மாதங்கள் வேலையில்லாமல் இருந்தால் பெற முடியும். ஒருவேளை 75 சதவீதம் பிஎஃப் பணத்தை பெற்ற பிறகு ஒருவருக்கு வேலை கிடைத்து விட்டால், வேறு வேலைக்குச் சென்ற பிறகு அந்த பிஎஃப் கணக்கை தொடரவும் வழி செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் நேற்று நடைபெற்ற இபிஎஃப் இந்தியா கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் தலைமையிலான கூட்டத்திற்குப் பிறகு ஈபிஎஃப் அமைப்பின் டிவிட்டர் தகவலில் இது தெரிவிக்கப் பட்டுள்ளது.
EPFO extends additional facility to unemployed members to avail non refundable advance upto 75 % of outstanding balance in case of unemployed for more than a month. Existing provision of complete withdrawal after two months of unemployment remains unchanged.
— EPF INDIA (@socialepfo) June 26, 2018
This decision was taken during 222nd meeting of CBT held today under the chairmanship of Union Minister of State for Labour & Employment (Independent Charge) Shri Santosh Kumar Gangwar.
— EPF INDIA (@socialepfo) June 26, 2018