எளிதாக மொமொஸ் செய்வது எப்படி?

momos 1 - 2026

வெஜிடேரியன் மொமொஸ்

தேவையான பொருட்கள்:
மொமொவிற்கு.

மைதா – 3 கப்

பேக்கிங் பவுடர் – 1/4 டீஸ்பூன்

வெங்காயம் – 4-5 (பொடியாக நறுக்கியது)

முட்டைகோஸ் – பாதி (பொடியாக நறுக்கியது)

கேரட் – 4 (பொடியாக நறுக்கியது)

வெண்ணெய் – 2-3 டேபிள் ஸ்பூன்

இஞ்சி பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்

அஜினமோட்டோ – 1/2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

சாஸ் செய்வற்கு.

தக்காளி – 3 பூண்டு பற்கள் – 2

பச்சை மிளகாய் – 2

மல்லி – 2 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் மைதா, பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு போட்டு, தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் போட்டு உருகியதும்,

வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கியதும், இஞ்சி பேஸ்ட் சேர்த்து வதக்கி,

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

பின் முட்டைக்கோஸ் மற்றும் கேரட் சேர்த்து, காய்கறிகள் வேகும் அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து, மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.

காய்கறிகளானது நன்கு மென்மையாக வெந்து, தண்ணீர் வற்றியதும், அதில் அஜின மோட்டோவைப் போட்டுநன்கு கிளறி, இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.பின்பு பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக்கி, ஒவ்வொரு உருண்டையையும் மெல்லிய வட்டமாக தட்டி,

அதன் நடுவே காய்கறி கலவையை சிறிது வைத்து,கூம்பு வடிவில் செய்து கொள்ள வேண்டும்.

இதேப் போல் அனைத்து மாவையும் செய்து கொள்ள வேண்டும்.

பின் ஒரு இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, தண்ணீர் ஊற்றி, தண்ணீர் நன்கு கொதித்தப் பின்னர்,

இட்லி தட்டில் சிறிது எண்ணெய் தடவி, அதில் செய்து வைத்துள்ள மொமொக்களை வைத்து,

மூடி வைத்து, 15-20 நிமிடம் வேக வைத்து எடுக்க வேண்டும்.

சாஸ் செய்முறை.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் தக்காளியைப் போட்டு, அடுப்பில் வைத்து, 5 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.

ALSO READ:  ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

பின் தக்காளியில் உள்ள தோலை நீக்கி விட வேண்டும்.

பின்பு மிக்ஸியில் தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

இறுதியில் ஒரு தட்டில் இட்லி பாத்திரத்தில் உள்ள மொமொக்களை வைத்து, அதன் மேல் சாஸை ஊற்றி பரிமாறலாம்.

சுவையான மொமொஸ் தயார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories