December 6, 2025, 9:51 AM
26.8 C
Chennai

பட்டுப் போன்ற கரங்களுக்கு.. பக்கா டிப்ஸ்!

hand - 2025

உள்ளங்கைகள் பலருக்கும் மிருதுவாக இருப்பதில்லை. கைகள் மிருதுவாக இருந்தாலும் உள்ளங்கை கடினமாக இருக்கும்.

இதற்கு காரணம் பாத்திரம் விளக்கும் மோசமான கெமிக்கல் நிறைந்த சோப், கடினமான வேலைகளை செய்தல், மற்றும் மண் போன்றவற்றில் சிறுவயதில் விளையாடியிருந்தால் இவ்வாறு உள்ளங்கைகள் கடினமாக மாறிவிடும்.

இந்த உள்ளங்கைகள் மிருதுவாக்க நீங்க பல குறிப்புகளை ட்ரை பண்னியிருந்தும் பயனளிக்கவில்லையா? இந்த குறிப்பை பயன்படுத்திப் பாருங்கள். நல்ல பலன் கிடைக்கும்.

பால் மற்றும் எலுமிச்சை சாறு :
காய்ச்சி ஆறிய பாலில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் சேர்க்கவும். இதனை அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.
அதன் பின் அதனை கை மற்றும் உள்ளங்கைகளில் தேயுங்கள். காய்ந்ததும் கழுவவும்.
இதனை தினமும் செய்து வந்தால் கைகளில் இருக்கும் சொரசொரப்பு காணாமல் போய் விடும்.

ஓட்ஸ் மாஸ்க் :
தேவையானவை :
ஆலிவ் எண்ணெய்
ஓட்ஸ்
கிளிசரின்
இந்த மூன்றையும் ஒன்றாக கலந்து மாவு பதத்துக்கு தயார் செய்து கொள்ளுங்கள். பின் இதனை கைகள் மற்றும் உள்ளங்கைகளில் தேய்த்து 30 நிமிடம் அப்படியே வைக்கவும்.

பிறகு நீரில் கழுவுங்கள். வாரம் 3 முறை செய்து பாருங்கள். சொரசொரப்பு நீங்கி உள்ளங்கை மிருதுவாகும்.

இரவு தொங்கச் செல்லுமுன் வெண்ணையை உருக்கி, அதில் சிறிது வெள்ளரி சாறு, பாதாம் எண்ணெய் கலந்து கொள்ளுங்கள்.

இந்த கலவையை உள்ளங்கைகளில் தடவி 20 நிமிடம் ஊற விடுங்கள். பின்னர் கையை கழுவலாம். சோப் போடாமல் வெறுமனே கழுவிவிட்டு தூங்கச் செல்லுங்கள். ஒரே வாரத்தில் கைகள் மென்மை பெறும்.

ஆலிவ் மற்றும் தேங்காய் எண்ணெய் :
ஆலிவ் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் சம அளவு கலந்து அதில் சிறிது சர்க்கரையை கரைத்துக் கொள்ளவும். இதனை உள்ளங்கைகளில் பரபரவென தேய்த்து 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். உள்ளங்கை மிருதுவாகும்.

உறை அணியவும் :
அதிக குளிர் அல்லது ஏசியில் இருக்கும்போது கைகளில் ஈரப்பதம் குறைந்து வறண்டு விடும். இதனால் கைகளில் சுருக்கம், வறட்சி, ஏற்பட்டு கடினமாகிவிடும்.

இந்த அதிகப்படியான குளிரை தவிர்க்க கைகளுக்கு உறை அணிந்து கொள்வது கைகளில் சுருக்கம் உண்டாகாமல் தடுக்கும்

ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீர் எடுத்து, அதில் பாதி எலுமிச்சை, 2 துளி டெட்டால் மற்றும் சிறிது ஷாம்பூ சேர்த்து கைகளை அதில் சிறிது நேரம் வைத்திருக்கவும். பிறகு, கைகளுக்கான பிரஷ் கொண்டு நன்கு தேய்த்து கழுவவும். துடைத்துவிட்டு, சிறிது தேங்காய் எண்ணெயை தேய்த்துவிடவும். பாத்திரங்கள் துலக்குவதால் ஏற்படும் சொரசொரப்பு நீங்கி, கைகள் மென்மையாக இருக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories