கனவின் விளைவு: பதவி உயர்வு, சம்பள உயர்வு.. இப்படி கண்டால்!

Published:

dream-1
dream-1

அரிசி மூட்டையை கனவில் கண்டால் நல்ல லாபமும் தொழிலில் விருத்தியும் ஏற்படும்

அம்பு எய்வது போல கனவு வந்தால் நல்ல செய்தி வரப்போகிறது என்று அர்த்தம்.

அணிகலன்கள் வாங்குவது போல கனவு வந்தால் இன்பம் உண்டாகும் சந்தோஷம் அதிகரிக்கும்

இரும்பை கனவில் கண்டால் நஷ்டம் ஏற்படும்.
இரும்பை உடைப்பது போல் கனவு வந்தால் பல நாட்களாக இருந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும் என்று அர்த்தம்.ஆனால் வெற்றி உங்கள் பக்கம்.

இறைச்சியைக் கொண்டு செல்வது போல் கனவு கண்டால் உங்களுக்கு பெரும் புகழ் வர போகிறது என்றும் அதன் மூலமாக செல்வமும் சேரப் போகிறது என்று அர்த்தம்.

உடைந்த கண்ணாடியை கனவில் கண்டால் உங்கள் உடன் இருப்பவர்களை நீங்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று அர்த்தம் அதை கொஞ்சம் மாற்றிக் கொண்டால் உங்கள் வாழ்க்கையில் சந்தோஷம் ஏற்படும்.

உடுக்கையை கனவில் கண்டால் தனக்கு ஏற்படும் ஆபத்தை உடன் இருக்கும் நண்பர்கள் காப்பாற்றுவார்கள் என்று அர்த்தம்.

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

உப்பை கனவில் கண்டால் நல்ல தனலாபம் ஏற்படும்.

இறைச்சியை விற்பனை செய்வதை கனவில் கண்டால் எதிர்பாராத தனலாபம் ஏற்படும் என்பதை குறிக்கும்.

எண்ணெய் தேய்த்து குளிப்பது போல் கனவு வந்தால் உடல் வலிமை குறைவு ஏற்படும் என்பது அர்த்தம்.

ஏணி மேல் ஏறுவது போல் கனவு வந்தால் உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும்
ஏன் இருந்து கீழே இறங்குவது போல் கனவு கண்டால் செய்யும் தொழிலில் நட்டம் ஏற்படும் என்பதை குறிக்கும்.

புல்லாங்குழல் கனவில் வந்தால் உங்கள் மனது உறுதியற்றதாக இருக்கிறது என்று அர்த்தம்.

மேஜையை கனவில் கண்டால் ஒரு வழக்கு முடிவுக்கு வரும் உங்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு ஏற்படும் என்பதை குறிக்கும்.

கத்தியை கனவில் கண்டால் உங்கள் நண்பர்களிடம் நீங்கள் எதிராக நடந்து கொள்ளப் போகிறீர்கள் என்று அர்த்தம் அப்படி நடந்து கொள்ளாமல் இருப்பதற்கு இது அறிவுறுத்தி செல்கிறது.

பணிகளை கனவில் காண்பது மகிழ்ச்சியான சூழ்நிலையை ஏற்படுத்தும்.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

காற்றாடி பலூன் போன்றவற்றை கனவில் கண்டால் வீண் விரயம் கட்டாயம் உருவாகும் என்பதை குறிக்கும்.புது முயற்சியில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

கிரீடத்தை கனவில் கண்டால் உங்களுக்கு மதிப்பு மரியாதை அந்தஸ்து செல்வம் ஆகியவை உயரப் போகின்றது என்று அர்த்தம்.

கிழிந்த துணியை கனவில் கண்டால் நீங்கள் செய்யும் காரியம் சீக்கிரமாக நடைபெறும்.விடாமுயற்சியுடன் இருப்பீர்கள் இதனால் புது வரவும் வெற்றியும் கிடைக்கப் பெறும்.கிழிந்த துணியை தைப்பது போல கனவு கண்டால் புகழ் செல்வம் உண்டாகும்.

குங்குமத்தை கனவில் கண்டால் மங்களகரமான நிகழ்ச்சி நடைபெறும்.

குடையை கனவில் கண்டால் பாதுகாப்பான வாழ்க்கை சூழலை அமையப் போகின்றது என்று அர்த்தம்.

சங்கை கனவில் கண்டால் துன்பங்கள் நீங்கி சுகவாழ்வு ஏற்பட போகின்றது என்று அர்த்தம்.

சந்தனத்தை கனவில் கண்டால் உங்களுக்கு புகழும் கௌரவமும் கிடைக்கப் போகிறது அது கிடைப்பதற்கான வாய்ப்பை நீங்கள் இன்னும் பயன்படுத்திக் கொள்ளாமல் இருக்கிறார்கள் என்றும் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதைக் குறிப்பதே.

ALSO READ:  மதமாற்ற விவாதம் ... மீண்டும்!

ஜமாதே கனவில் கண்டால் நீங்கள் ஒரு பெண்ணுடன் நட்பாக பழகுவதை நீங்கள் காதல் என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் அவ்வாறு அவர்களிடம் பேசினால் அது பிரச்சனையிலும் மனதிலும் போய் முடியும் எனவே அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டு அவரிடம் நட்பாக மட்டுமே பழக வேண்டும் என்பதை குறிக்கும்.

சாவியை கனவில் கண்டால் திருமணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும்.

சிலையை கனவில் பார்த்தால் புகழ் உண்டாகும் என்பதை குறிக்கும்.

Related articles

Recent articles

spot_img