கனவின் விளைவு: பசு, காளை எருமை வந்தால்..!

Published:

dream-1
dream-1

காளை மாடு, பசுமாடு, , குதிரை போன்றவைகள் கனவில் வந்தால் உங்கள் குடும்பம் மென்மேலும் மேன்மை பெறும் என்று அர்த்தம்.

காளைகள் கனவில் வருவது நல்லதல்ல. இதனால் துன்பங்கள் வரும்.

காளை நம்மை துரத்தினால் மரண பயம் ஏற்படும்.

காளை நம்மை முட்டுவது போல கனவு வந்தால் விபத்து ஏற்படும். மருத்துவ செலவு ஏற்படலாம்.

காளை நம்மை மிதிப்பது போல் கனவு கண்டால் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.

காளை நம்மை பார்த்து சீறுவது போல் கனவு கண்டால் பிறரின் மேல் நாம் கொண்ட அதிகாரம் குறையும்.

இளங்காளைகள் கனவில் வந்தால் குழந்தைகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும்.

பசு கன்று ஈனும் காட்சி கனவில் வந்தால் செல்வ வளம் ஏற்படும் என்று பொருள்.

05 July15 cow briding
05 July15 cow briding

பசுவை கனவில் காண்பது மிகவும் நல்லது.

பசு மாடு வீட்டுக்குள் வருவது போல கனவு கண்டால் மிக நல்லது.

ALSO READ:  முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

பசுவையும் கன்றையும் ஒன்றாக கனவில் கண்டால் வீட்டில் சுபச் செய்தி வரும்.

வெள்ளை நிற பசு கனவில் வந்தால் உங்கள் வாழ்வில் மிக பெரிய நல்ல மாற்றங்கள் ஏற்படும்.எருமையை கனவில் காண்பது நல்லதல்ல.

பசு கன்று போடுவது போல கனவு காண்பது நல்லதல்ல. துன்பங்கள் வந்தடையும்.

ஆனால் கன்று ஈன்ற பசுவைக் கனவில் பார்ப்பது செல்வ வளத்தை உண்டாக்கும்.

அதே போல வீட்டில் எருமை நுழைவது போல கனவு வந்தாலும் நல்லதல்ல. இதனால் வீட்டில் துக்க நிகழ்ச்சிகள் ஏற்படும் என்று பொருள்.

எருமை முட்டுவது போல் கனவு வந்தால் வாகனங்களில் செல்லும்போது விபத்துக்கள் ஏற்படும்.

நம்மை நோக்கி எருமை வருவது போல் கனவு கண்டால் நமக்கு பிரச்னை மேல் பிரச்னை வரும். ஆனால், சிறிது நாட்களிலேயே பிரச்சனை இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

Related articles

Recent articles

spot_img