அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு! சிறுநீர் பிரச்சினை!

health tips 1
health tips 1

குழந்தைக்கு உரிய வயது வந்தும் சரியாகப் பேச்சு வரவில்லையா?

சுத்தமான தேனை இரவு முழுவதும் பனியில் வைத்து எடுத்து அதிகாலையில் குழந்தையின் நாக்கில் தாராளமாகத் தடவி வர சீக்கிரத்தில் குழந்தை நன்றாகப் பேசத் தொடங்கி விடும்.

சிலந்தி கடிக்கு…

ஆடா தொடை இலையைப் பச்சை மஞ்சளுடன் சம எடை மிளகு சேர்த்தரைத்து கடித்த இடத்தில் வைத்துக்கட்ட விஷமிறங்கும்.

சிறுநீர் கோளாறுக்கு…

  • எலுமிச்சம்பழச்சாற்றுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து உள்ளுக்குச் சாப்பிட இரண்டொரு வேளையிலேயே நீர்க்கடுப்பு நீங்கி விடும்.

வாழைத் தண்டை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வர சிறுநீர் கோளாறுகள் குணமாகும்.

கருவேலின் கொழுந்தின் சாற்றில் தண்ணீர் விட்டுக் காய்ச்சி சர்க்கரையுடன் கலந்து காலையிலும் மாலையிலும் சாப்பிட இருமல். நீர்ச்சுருக்கு, வெள்ளை முதலான வியாதிகள் குணமாகும்.

10 சண்பகப்பூவை 100 மி.லி. தண்ணீர் விட்டுக் கொதிக்கக் காய்ச்சி குடித்து வர வெட்டை, மேக நோய்கள் கணைச்சூடு, நீர்ச்சுருக்கு, நீர்க்கடுப்பு, சொட்டு மூத்திரம் ஆகியவை இரண்டொரு நாள்களில் குணமாகும்.

ALSO READ:  தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!

சிறுநீர் கடுப்புக்கு…

ஒரு தோலா முள் இலவு இலையைப் பறித்து அரைத்துப் பாலோடு சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர நீர் தாராளமாக இறங்கும்.

உடல் உஷ்ணம் அதிகமாகி சிறுநீர் தாராளமாக இறங்காமல் வலி ஏற்படும் சமயங்களில் கண்டங்கத்திரி இலைச்சாற்றோடு சம அளவு தேன் கலந்து – அரை அவுன்ஸ் ஒரு வேளை கொடுக்க நல்ல குணம் தெரியும்.

கல்யாண முருங்கையின் இலைச் சாறு சிறுநீர் எரிச்சலைப் போக்கி தாராளமாய் நீர் இறங்கச் செய்யும். காலை, மாலை வேளைகளில் ஓர் அவுன்ஸ் வீதம் அருந்தி வர நீண்டகால நீர்ச்சுருக்கு. நீர் எரிச்சல் வியாதிகள் நீங்கும். பெண் மலட்டுத் தன்மையும் மாறும்.

உடல் உஷ்ணத்தால் நீர்க்கடுப்பு ஏற்பட்டால் நிறைய மோர் சாப்பிடலாம். அதில் எலுமிச்சம் பழச்சாற்றை விட்டுச் சாப்பிட நீர்க்கடுப்பு போய்விடும்.

மூத்திரக் கோளாறுகள் ஏதேனும் இருந்தால் உலர்ந்த திராட்சைப் பழங்களை இரண்டாய் பிளந்து இரவே நீரில் ஊறப் போட்டு, காலையில் பிசைந்து எடுத்து அந்த நீரில் நெல்லிக்காய் ரசத்தைக் கலந்து சாப்பிட்டு வந்தால், குணமாகி விடும்.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால், மூத்திரம் கழிக்க சிரமமேற்படும். அடைப்பு ஏற்படும். இந்தக் கற்களை கரைக்க ஓமத்தைக் கஷாயம் வைத்து பாலில் கலந்து சாப்பிட்டு வாருங்கள். சில நாள்களில் அந்தக் கற்கள் கரைந்து விடும்.

சிறுநீர்த் தாரையில் எரிச்சலா?

சிறுநீர்த் தாரையில் எரிச்சலோ வலியோ ரணமோ உண்டாகியிருந்தால் நித்திய கல்யாணிப்பூ, நெருஞ்சில் சமூலம் இரண்டும் சம எடை எடுத்து கஷாயம் வைத்து சர்க்கரையும் பாலும் சேர்த்து காலையில் மட்டும் இருபது தினங்களுக்குக் குறையாமல் சாப்பிட்டு வர குணமாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories