அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: உடல் அசதி, கை கால் குஷ்டம், மாலைக்கண் நோய்..!

Published:

health tips - 2026

உடல் அசதி நீங்க…

முருங்கை ஈர்க்குகளுடன் மிளகு ரசம் வைத்து இரண்டு நாள்கள் சாப்பிட்டு வர உடல் அசதி நீங்கும்.

இலுப்பை இலைகளை அரைத்து உடவில் தேய்த்து ஊறிக் குளிக்க உடலுக்கு தெம்பும் சுறு சுறுப்பும் ஏற்படும்.

மாலைக்கண் நோய்க்கு…

மிளகை நல்லெண்ணெயில் ஊற வைத்து சாயங்காலம் உரைத்து தலையில் பூசி வர சரியாகும்.

எட்டி விதையை முலைப்பாலில் உரைத்து கண்களின் மேல் போட்டு வர குணமாகும்.

யோனியில் நீரொழுகலுக்கு…

கற்றாழைச் சோறும் சீனிச் சர்க்கரையும் கலந்து ஆறுநாள் சாப்பிட தீரும். உப்பு, புளி நீக்கி பத்திய உணவு உண்ண வேண்டும்.

வலியுடன் வயிறு கழிவதற்கு…

பாலாரசம் பட்டை 35 கிராம் எடுத்து ஒரு லிட்டர் நீர்விட்டு பாதியாக கண்டக் காய்ச்சி வடித்து பாலரசிலைத் தண்டு 10 கி அரைத்துப் போட்டு நெய் ஒரு லிட்டர் விட்டு பதமாக காய்ச்சி வடித்து ஒரு ஸ்பூன் அளவு உட்கொள்ள குருதி, சீதம், வலியுடன் வரும் கழிச்சல் எல்லாம் குணமாகும்.

ALSO READ:  ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

கை, கால் குறைந்த குஷ்டத்திற்கு…

பிரண்டைக் கொழுந்தை பசும்பாவில் அரைத்து ஒரு மண்டலம் சாப்பிட குணமாகும். உப்பு, புளி நீக்கி பத்தியம் இருக்க வேண்டும்.

Related articles

Recent articles

spot_img