சீதாப்பழ பலன்கள்:
சீதாப்பழத்தில் வைட்டமீன் C , கால்சியம், நார்சத்து, புரதம், கொழுப்பு,தாதுப்பொருட்கள்,இரும்பு சத்து குளுக்கோஸ்,சுக்ரோஸ் எல்லாம் சரிசமமாக உள்ளது.
சயரோகம்: சீதாபழ மரயிலைகளை கசாயம் போட்டு சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு சரியாகும். சயரோகமும் கட்டுப்படும்.
கருசிதைவைக் கட்டுப்படுத்த இம்மரத்தின் வேர் பயன்படுகிறது.
சீதாபழமும் உப்பும் சேர்த்து அரைத்துப் பூசினால் பரு ,கட்டி போன்றவை உடையும்.இலைகளை அரைத்துப் பூசினால் புண் வடு ஆறும்.
விதையைப் பொடியாக்கி சமயளவு பாசிப்பயறு மாவுடன் கலந்துக் குளிக்க பொடுகு பேன் தொல்லை தீரும்.மிருதுவான கேசம் கிடைக்கும்.
கடலை மாவுடன் எலுமிச்சைச்சாறு கலந்து சீதாப்பழவிதைப்பொடியையும் சேர்த்து குளிக்க முடி உதிராது.
ஆஸ்துமா, காசநோய் குணமாகும் . இதயம் பலமடையும் பற்கள், பலமடையும் எலும்புகள் பலமடையும். குளிர்காய்ச்சலைக் குறைக்கும்.