பூட்டிய அறையில் கன்னியாஸ்திரியின் கண்ணீர் ! பிரார்த்தனைக்கு கூட அனுமதியில்லை !

prongo 3 - 2026கேரளாவைச் சேர்ந்த முன்னாள் பிஷப் ஃபிராங்கோ, கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை சீரோ மலபார் சபையில் பணியாற்றி வந்தார். அந்தக் காலகட்டத்தில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகக் கடந்த வருடம் கன்னியாஸ்திரி ஒருவர் ஃபிராங்கோ மீது புகார் அளித்தார். இந்த விவகாரம் கேரள மாநிலம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது.lusi 1 - 2026இதையடுத்து, `ஃபிராங்கோவைக் கைது செய்ய வேண்டும்’ எனக் கூறி கொச்சியில் கன்னியாஸ்திரிகள் பலர் இணைந்து போராட்டம் நடத்தினர். பின்னர் ஃபிராங்கோ கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இவர் மீதான வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், பிஷப்புக்கு எதிராகச் சாட்சி சொன்ன பாதிரியார் குரியகோஸ் கட்டுத்தரா என்பவர் கடந்த ஆண்டு அக்டோபரில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
lusi - 2026தொடர்ந்து, பிஷப்புக்கு எதிராகப் போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரிகளில் ஒருவரான சிஸ்டர் அனுபமாவை இடமாற்றம் செய்து சபை உத்தரவு பிறப்பித்தது.  அதே போராட்டத்தில் கலந்துகொண்ட கன்னியாஸ்திரி லூஸி களப்புரா என்பவர் கடந்த மே மாதம் சபையிலிருந்து நீக்கப்பட்டார். பாலியல் வழக்கில் சிக்கிய பிஷப் ஃபிராங்கோவுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரிகளைக் குறிவைத்துப் பழிவாங்கலாக இந்த நடவடிக்கைகள் அமைவதாகப் புகார் எழுந்துள்ளது.prongo - 2026இந்நிலையில் தங்கியிருந்த கான்வென்டிலேயே சிறை வைக்கப்பட்டுள்ளார் லூசி. இதுகுறித்து லூசி கூறியது, ` நான் இரண்டு நாள் பயணமாக வெளியூர் சென்றுவிட்டு நேற்றுமுன் தினம் நள்ளிரவு தான் கான்வென்ட்டுக்கு வந்தேன். பின்னர் நேற்று காலை 6:30 மணிக்குக் கதவைத் திறக்க முயற்சி செய்தபோது அது வெளிப்புறமாகப் பூட்டப்பட்டிருந்தது. அப்போதுதான் நான் சிறை வைக்கப்பட்டிருந்ததை உணர்ந்தேன்.prongo 2 - 2026இதனால் அதிர்ச்சியடைந்து, உதவிக்காக அருகிலிருந்த பலரையும் அழைத்தேன். ஆனால், யாரும் உதவிக்கு வரவில்லை. பின்னர் காவலர்களுக்குப் போன் செய்து தகவல் தெரிவித்தேன். அவர்கள் வந்து கதவை உடைத்து என்னை மீட்டனர். கான்வென்ட் அதிகாரிகள் என் சுதந்தரத்தைப் பறித்து, பிரார்த்தனை செய்வதற்குக்கூட அனுமதி மறுத்துவிட்டனர்” எனக் கூறியுள்ளார்.prongo 1 - 2026இதே விவகாரம் தொடர்பாக முன்பொருமுறை ஒரு செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த லூசி, “ எனக்கு மிகவும் பயமாக உள்ளது, அவர்கள் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்று வருகிறார்கள். என் முழு சந்தோஷத்தையும் என்னிடமிருந்து பறிக்க நினைக்கிறார்கள். என்னுடன் கான்வென்ட்டில் உள்ள மற்ற கன்னியாஸ்திரிகள் என்னைப் பார்த்தாலே ஏளனமாகச் சிரிக்கிறார்கள். என்னைத் தனிமைப்படுத்திவிட்டனர். என்னுடன் சேர்ந்து சாப்பிடக்கூட அவர்கள் வருவதில்லை. இவை அனைத்தையும் நான் ஏற்றுக்கொண்டேன். ஆனால், இது மிகவும் கடினமாக உள்ளது” எனக் கலங்கியிருக்கிறார்.

ALSO READ:  ஐபிஎல் - 2026: கலக்கும் இளம்புயல் சூர்யவன்ஷி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories