February 22, 2026, 11:27 AM
29.6 C
Chennai

ப.சிதம்பரத்துக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட்: சிபிஐ தகவல்!

p chidambaram - 2026

முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமீனில் வராத பிரிவில் வாரண்ட் பிறப்பிக்கப் பட்டுள்ளதாக சிபிஐ., தரப்பு நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டுள்ள மனுவில், சிதம்பரத்திற்கு ஜாமீனில் வராத பிரிவில் வாரண்ட் பிறப்பிக்கப் பட்டதாகவும், அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது! எங்கள் விசாரணைக்கு ப. சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை என்று சிபிஐ., கூறியுள்ளது. அதனால் அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று சிபிஐ கோரியது.

முன்னதாக, சிபிஐ., அலுவலகத்தின் 4வது தளத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் ப.சிதம்பரத்திடம் விசாரணை மேற்கொள்ளப் பட்டது. பின்னர், இன்று காலை தரை தளத்தில் உள்ள அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணைகளில் சிதம்பரம் சிபிஐ.,க்கு ஒத்துழைப்பு கொடுக்க வில்லை என்று கூறப் பட்டது.

சிபிஐ.,யின் விசாரணைக்கு ப.சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை என்பதாலும், சொன்ன பதிலையே திரும்ப திரும்ப சொல்வதால், காவலில் எடுத்து விசாரிக்க  சி.பி.ஐ. தீவிரம் காட்டியது.  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. திட்டம் இட்டது.

சிதம்பரத்திடம் 3 மணி நேரத்திற்கு மேல் நடத்தப்பட்ட விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என சி.பி.ஐ. வட்டார தகவல்கள் தெரிவித்தன. இதை அடுத்து, அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்ற வாதத்தை முன் வைத்து காவலில் எடுக்க சி.பி.ஐ. திட்டம் இட்டது.

இதை அடுத்து தில்லி சிபிஐ., சிறப்பு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார் ப.சிதம்பரம்.

ப.சிதம்பரம் தரப்பில் நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், கபில் சிபல், அபிஷேக் சிங்வி உள்ளிட்டோர் சி.பி.ஐ நீதிமன்றம் வந்தனர்.

முன்னதாக, சிதம்பரம் வந்தபோது, நீதிமன்ற வளாகத்திற்குள் ப.சிதம்பரத்திடம் பேச முற்பட்ட கார்த்தி சிதம்பரத்தை தடுத்து நிறுத்தியது சி.பி.ஐ.

சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹர் முன் சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார்.   சிபிஐ தரப்பு வழக்கறிஞர் பத்மினி சிங் நீதிமன்றம் வந்தார்.  நீதிமன்ற வளாகத்தில் நளினி, கார்த்தி சிதம்பரம் ஆகியோரும் வந்தனர்.  மூத்த வழக்கறிஞர்கள் கபில்சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகியோரும் நீதிமன்றத்தில் இருந்தனர்.

அதன் பின்னர் சிபிஐ நீதிமன்றத்தில் வாதம் தொடங்கியது.  அப்போது, ப.சிதம்பரத்துக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சிபிஐ தரப்பு கூறியது.  வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட 24 மணிநேரத்தில் ப.சிதம்பரத்தை ஆஜர்படுத்தியுள்ளோம் என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப் பட்டது. எங்களின் எந்த கேள்விக்கும் ப.சிதம்பரம் பதில் அளிக்கவில்லை என்றும்,  அவர் எங்களிடம் எதுவுமே பேசவில்லை; பேசாமல் இருப்பது அடிப்படை சுதந்திரமாக இருக்கலாம்; ஆனால் அவர் வழக்கு விசாரணைக்கு எதிராக செயல்படுகிறார் என்று கூறியது சிபிஐ.,!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories