வாய்திறக்க மறுக்கும் சிதம்பரத்துக்கு பின்னடைவு! ஆக.30 வரை சிபிஐ., காவல் நீட்டிப்பு!

p chidambaram - 2026

“ப. சிதம்பரம் எங்களுக்கு ஒத்துழைப்பு தரவில்லை. ஆகவே, சிபிஐ காவலுக்கு மேலும் 5 நாள் நீட்டிப்பு தர வேண்டும்.” என்று சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் சிபிஐ வாதிடப் பட்டுள்ளது.

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வாய் திறக்க மறுத்துவருவதாக சிபிஐ கூறியதால், அவருக்கான சிபிஐ., காவல் வரும் ஆக.30ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது!

சிதம்பரம் பெயரில் வெளிநாட்டில் இருக்கும் ஒரு சொத்தை காட்டினால், ஜாமின் வழக்கை திரும்பப் பெற்றுக் கொள்கிறோம் என சிதம்பரம் தரப்பு வழக்கறிஞரான கபில்சிபல் சுப்ரீம் கோர்ட்டில் வாதிட்டனர். தொடர்ந்து அவரது சி.பி.ஐ., காவலை வரும் 30ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு மீதான விசாரணையின் போது சிதம்பரம் மற்றும் அவரது பினாமிகள் பெயரில் அர்ஜென்டினா, ஆஸ்திரியா, பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், பிரான்ஸ், கிரீஸ், மலேசியா, மனோகா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் வங்கிக் கணக்குகளும், சொத்துக்களும் உள்ளதாக நிதித்துறை புலனாய்வு அமைப்பிடம் இருந்து தகவல் கிடைத்தள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் சிதம்பரம் பினாமி பெயர்களில் 17 வங்கிக் கணக்குகளும், 10 விலையுயர்ந்த சொத்துக்களும் உள்ளதாகவும் அமலாக்கத்துறை கூறியது. இதற்கு பதிலளித்த, சிதம்பரம் தரப்பு வழக்குரைஞர்கள் கபில்சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர், தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடி செய்த அன்றே உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டு விட்டது. எனவே, அந்த வழக்கு காலாவதி ஆகவில்லை. அவரது முன்ஜாமின் மீதான மேல்முறையீடு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அவரை கைது செய்துள்ளன.

ALSO READ:  பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

மேலும், சிதம்பரத்துக்கு எதிராக ஆவணங்கள் எதையும் அமலாக்கத்துறை அளிக்கவில்லை. அவர்கள் ஊடகன்களிடம்தான் ஆதாரங்களை அளித்துள்ளனர். இப்போது நடப்பது நீதிமன்ற விசாரணை அல்ல, ஊடகங்களின் விசாரணைதான் நடக்கிறது.

சிதம்பரம் பெயரில் வெளிநாட்டில் இருக்கும் ஒரே ஒரு வங்கிக் கணக்கு அல்லது சொத்துக்கான விவரங்களை நீதிமன்றத்தில் அளித்தால் நாங்கள் ஜாமின் மனுவை திரும்பப் பெற்றுக் கொள்கிறோம்.

கடந்த 5 நாட்களாக சிதம்பரத்திடம் சிபிஐ எந்த விசாரணையும் நடத்தவில்லை. வெறுமனே அவரிடம் டுவிட்டர் கணக்கு உள்ளதா என்று மட்டுமே கேட்கப்பட்டுள்ளது என வாதிட்டனர்.

ஆனால், “ப. சிதம்பரம் எங்களுக்கு ஒத்துழைப்பு தரவில்லை. ஆகவே, சிபிஐ காவலுக்கு மேலும் 5 நாள் நீட்டிப்பு தர வேண்டும்.” என்று சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் சிபிஐ வாதிடப் பட்டுள்ளது.

தொடர்ந்து சிதம்பரத்தை மேலும் 5 நாள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து அவரம் மீண்டும் 30 ம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்.

ALSO READ:  இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

Topics

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

Entertainment News

Popular Categories