December 6, 2025, 4:07 AM
24.9 C
Chennai

வாய்திறக்க மறுக்கும் சிதம்பரத்துக்கு பின்னடைவு! ஆக.30 வரை சிபிஐ., காவல் நீட்டிப்பு!

p chidambaram - 2025

“ப. சிதம்பரம் எங்களுக்கு ஒத்துழைப்பு தரவில்லை. ஆகவே, சிபிஐ காவலுக்கு மேலும் 5 நாள் நீட்டிப்பு தர வேண்டும்.” என்று சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் சிபிஐ வாதிடப் பட்டுள்ளது.

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வாய் திறக்க மறுத்துவருவதாக சிபிஐ கூறியதால், அவருக்கான சிபிஐ., காவல் வரும் ஆக.30ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது!

சிதம்பரம் பெயரில் வெளிநாட்டில் இருக்கும் ஒரு சொத்தை காட்டினால், ஜாமின் வழக்கை திரும்பப் பெற்றுக் கொள்கிறோம் என சிதம்பரம் தரப்பு வழக்கறிஞரான கபில்சிபல் சுப்ரீம் கோர்ட்டில் வாதிட்டனர். தொடர்ந்து அவரது சி.பி.ஐ., காவலை வரும் 30ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு மீதான விசாரணையின் போது சிதம்பரம் மற்றும் அவரது பினாமிகள் பெயரில் அர்ஜென்டினா, ஆஸ்திரியா, பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், பிரான்ஸ், கிரீஸ், மலேசியா, மனோகா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் வங்கிக் கணக்குகளும், சொத்துக்களும் உள்ளதாக நிதித்துறை புலனாய்வு அமைப்பிடம் இருந்து தகவல் கிடைத்தள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் சிதம்பரம் பினாமி பெயர்களில் 17 வங்கிக் கணக்குகளும், 10 விலையுயர்ந்த சொத்துக்களும் உள்ளதாகவும் அமலாக்கத்துறை கூறியது. இதற்கு பதிலளித்த, சிதம்பரம் தரப்பு வழக்குரைஞர்கள் கபில்சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர், தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடி செய்த அன்றே உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டு விட்டது. எனவே, அந்த வழக்கு காலாவதி ஆகவில்லை. அவரது முன்ஜாமின் மீதான மேல்முறையீடு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அவரை கைது செய்துள்ளன.

மேலும், சிதம்பரத்துக்கு எதிராக ஆவணங்கள் எதையும் அமலாக்கத்துறை அளிக்கவில்லை. அவர்கள் ஊடகன்களிடம்தான் ஆதாரங்களை அளித்துள்ளனர். இப்போது நடப்பது நீதிமன்ற விசாரணை அல்ல, ஊடகங்களின் விசாரணைதான் நடக்கிறது.

சிதம்பரம் பெயரில் வெளிநாட்டில் இருக்கும் ஒரே ஒரு வங்கிக் கணக்கு அல்லது சொத்துக்கான விவரங்களை நீதிமன்றத்தில் அளித்தால் நாங்கள் ஜாமின் மனுவை திரும்பப் பெற்றுக் கொள்கிறோம்.

கடந்த 5 நாட்களாக சிதம்பரத்திடம் சிபிஐ எந்த விசாரணையும் நடத்தவில்லை. வெறுமனே அவரிடம் டுவிட்டர் கணக்கு உள்ளதா என்று மட்டுமே கேட்கப்பட்டுள்ளது என வாதிட்டனர்.

ஆனால், “ப. சிதம்பரம் எங்களுக்கு ஒத்துழைப்பு தரவில்லை. ஆகவே, சிபிஐ காவலுக்கு மேலும் 5 நாள் நீட்டிப்பு தர வேண்டும்.” என்று சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் சிபிஐ வாதிடப் பட்டுள்ளது.

தொடர்ந்து சிதம்பரத்தை மேலும் 5 நாள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து அவரம் மீண்டும் 30 ம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories