December 6, 2025, 7:27 AM
23.8 C
Chennai

பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் பயங்கரவாதி பீஹாரில் கைது!

special task force - 2025

பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்–இ–முகமது இயக்க பயங்கரவாதி தவுபிக் ரஸா பீகார் மாநிலம் கயா மாவட்டம் புனியட்கஞ்ச் பஜார் பகுதியில் பதுங்கி வாழ்ந்து வருவதாக மேற்கு வங்க மாநில சிறப்பு அதிரடிப் படைப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இந்நிலையில், இந்தத் தகவலை அடுத்து அம்மாநில சிறப்பு அதிரடிப்படை, பயங்கரவாத தடுப்புப் பிரிவு பீகாரில் பயங்கரவாதி இருந்து வந்த மான்புர் ப்ளாக் ஏரியாவில், புனியாத்கஞ்ச் பஜாரில் உள்ள வீட்டை அடையாளம் கண்டது. உள்ளூர் போலீசார் உதவியுடன் வீட்டை உளவு பார்த்து வந்தனர். 

இந்நிலையில் நேற்று இந்த வீட்டை முற்றுகையிட்ட பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதி தௌஃபிக் ரஸா என்ற இஜாஸ் அஹமதை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அந்த வீட்டில் இருந்து பிரச்னைக்குரிய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 2007–ஆம் ஆண்டில் இருந்து ஜெய்ஷ்–இ–முகமது இயக்கத்தில் இந்த நபர் பணியாற்றி வந்துள்ளது தெரியவந்துள்ளது.

அந்த நபர் தனது அடையாளத்தை மறைத்துக்கொண்டு, கடந்த சில ஆண்டுகளாக அந்த வீட்டில் வசித்து வந்துள்ளான். இந்தியாவில் அவன் பயங்கரவாத இயக்கத்துக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் செயலில் ஈடுபட்டானா? வேறு எந்த விதமான பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டான் என்பது குறித்து பாதுகாப்புப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories