நீண்ட நாள் தர்ம யுத்தத்தில் முதல்முதலாக தர்மத்தின் பக்கம் தீர்ப்பு கிடைத்துள்ளது!

Published:

chidamabaram court 1 - 2026

நீண்ட நாட்கள் நடந்த தர்மயுத்தத்தில் முதல் முதலாக தர்மத்தின் பக்கம் தீர்ப்பு கிடைத்துள்ளது… என்று ப.சிதம்பரம் கைது குறித்து, பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

மத்திய முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான 74 வயது ப.சிதம்பரம், ஐ.என்.எக்ஸ் மீடியா நிதி முறைகேடு வழக்கில் 15 நால் நீதிமன்றக் காவலில் சிறை வைக்க அனுப்பப் பட்டுள்ளார்.

தொடக்கம் முதலே, எனக்கு திஹார் சிறையை வழங்கி விடாதீர்கள், நான் அமலாக்கத்துறை விசாரணைக்குச் செல்கிறேன் என்றெல்லாம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மண்டியிட்டுப் பார்த்தார். உச்ச நீதிமன்றம் சென்று முறையிட்டால் நடக்கும் என்று கதவைத் தட்டினார். ஆனால் உச்ச நீதிமன்றம் கீழமை நீதிமன்றத்துக்கே மீண்டும் விரட்டிவிட்டது.

இந்நிலையில், கீழமை நீதிமன்றம், அவரை அமலாக்கத்துறை விசாரணைக்கு அனுப்பி வைக்காமல், நீதிமன்றக் காவலில் திஹார் சிறைக்கே அனுப்பி வைத்தது.

பல முறை அவருக்கு சிபிஐ நீதிமன்றத்தில் முன் ஜாமீன் வழங்கப் பட்டு, அது மீண்டும் மீண்டும் நீட்டிக்கப் பட்டு வந்தது. இடையில் மகன் கார்த்தி சிதம்பரம் சிறையில் இருந்து வெளிவந்து, தேர்தலில் போட்டியிட்டு, சிவகங்கை தொகுதியில் எம்.பி.,யும் ஆகிவிட்டார்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

இந்நிலையில், இன்றைய தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹெச்.ராஜா, தர்மயுத்தத்தில் முதல் முதலாக தர்மத்தின் பக்கம் தீர்ப்பு கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img